சிறு­பான்­மை­யி­ன­ரின் கவ­லை­கள் புரிந்­து­கொள்ளப்பட வேண்­டும்

சிறு­பான்­மை­யி­ன­ரின் கவ­லை­கள் புரிந்­து­கொள்ளப்பட வேண்­டும்

2 mins read
f4c68e2d-dfe4-4c82-97f9-06e523949fdb
-

இன நல்­லி­ணக்­கத்­தைக் கட்­டிக்­காப்­பது என்­பது, நீண்டகால தொடர் முயற்சி. அனை­வ­ருக்­கும் இனம் அல்­லது சமய பிடிப்பு இருக்­கும். இது ஒவ்­வொரு சமூ­கத்­திற்­கும் இயல்­பா­னது. ஆனால், பார­பட்­சம், பாகு­பாடு என்று வரும்­போது­தான் பிரச்­சினை உரு­வா­கிறது என்­றார் பிர­த­மர் லீ,

சீன மொழி பேசத்தெரிந்தவர்கள் மட்­டுமே விண்ணப்பிக்கலாம் என்று வரும் வேலைக்கு ஆள் தேடும் விளம்பரங்கள் உண்மை யிலேயே அந்த வேலைக்கு சீன மொழி அவசியம் என்பதை விளக்காதது, வீடு தேடு­ப­வர்­கள் சீனர்­கள் அல்ல என சொத்து முக­வர்­கள் அறிந்த பின்­னர், அவர்­க­ளுக்கு வீடு வாட­கைக்­கு­விட மறுப்பது போன்ற சில எடுத்­துக்­காட்­டு­களை அவர் சுட்­டி­னார்.

சிறு­பான்மை இனத்­தைச் சேர்ந்­த­வர்­களே இத்­த­கை­ய­வற்­றை கடுமை­யாக அனு­ப­விக்­கி­றார்­கள். ஏனெ­னில், அவர்­களே இத்­த­கைய இனப் பாரபட்சம் கார­ண­மாக அதி­க­மா­கப் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள்.

"நமது தேசிய பற்­று­றுதி இன்­னும் விரும்பப்படும் ஒன்றாகவே இருக்­கிறது. முழு­மை­யாக எட்­டப்­ப­ட­வில்லை என்று அவர்­கள் கோபம். காயம், வேத­னை­யை உணர்­கி­றார்­கள்.

"பெரும்­பான்மை இன­மாக இருப்­ப­தை­விட, சிறு­பான்­மை­யி­ன­மாக இருப்­பது சிர­ம­மா­னது என்­பதை அறி­வேன். இது எல்லா பல இன சமூ­கத்­தி­லும் உள்­ள­து­தான். ஆனால், இதே­நி­லையை சிங்­கப்­பூரில் நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­ப­தில்லை. இத­னால்­தான் இந்­தப் பிரச்­சினையைச் சரி­செய்ய நாம் முயற்சி செய்த வண்­ணம் இருக்க வேண்­டும்," என்­றார் அவர்.

பெரும்­பான்­மை­யி­னர், சிறு­பான்­மை­யி­ன­ரி­டையே தோன்­றும் கவ­லை­க­ளைப் புரிந்­து­கொள்ள வேண்­டும். அதே­நே­ரம், தனி­ம­னி­தர்­களிடம் இன­வாத செயல்­க­ளுக்கு எதி­ரா­கத் துணிந்து நிற்­கும் தைரி­யம் வேண்­டும்.

அதா­வது, இன­வாத சம்­ப­வங்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யாக எதிர்ப்­புத் தெரி­விப்­பது. இன அடிப்­ப­டை­யி­லான எதிர்ப்­பு­ணர்வை வேறு வகை­யான போராட்­ட­மா­கச் சித்­தி­ரிப்­ப­தைத் தட்­டிக்­கேட்க வேண்­டும். உதா­ர­ணமாக, சிங்­கப்­பூ­ரர்­களை முன்­னி­றுத்­து­வ­தா­கக் கூறி, சிங்­கப்­பூர்-இந்­தி­யா­வுக்­கி­டை­யே­யான முழு­மை­யான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு ஒப்­பந்­தத்­திற்கு எதி­ரான இயக்­கம் கடு­மை­யான இன­வாத அடிப்­ப­டை­யி­லான ஒன்று என்றார் பிரதமர் லீ.