இனத்தால் வேறுபட்டாலும் மனத்தால் ஒன்றுபட்டவர்கள்; வாம்போவில் கம்பத்து வாழ்க்கை

இனத்தால் வேறுபட்டாலும் மனத்தால் ஒன்றுபட்டவர்கள்; வாம்போவில் கம்பத்து வாழ்க்கை

2 mins read
0963e835-e826-4c87-8bbe-55614ba87007
திருமதி மகேஸ்வரி, திரு ராஜேந்திரன், திரு கோ தம்பதியினர், திரு டான் தம்பதியினர். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

அண்டை வீட்­டார் தனது பேரப்­பிள்­ளை­க­ளைப் பார்த்­துக்­கொள்ள வேண்டி இருந்­த­தால், அவ­ரது பணிப்­பெண்ணை இரண்­டா­வது தடுப்­பூசி போட அழைத்­துச் சென்­றார் 72 வயது திரு­வாட்டி வய­லெட் சிம்.

வாம்போ ரோடு, புளோக் 115ன் 6வது மாடி­யில் வசிக்­கும் 10 குடும்­பங்­க­ளுக்­கி­டையே இத்­த­கைய பரி­வான செயல்­கள் சாதா­ர­ண­மாக நடப்­பது. அந்­தத் தளத்­தில் பல ஆண்­டு­க­ளாக நான்­கறை அல்­லது ஐந்­தறை வீடு­களில் இக்­கு­டும்­பங்­கள் வசிக்­கின்­றன.

பல இன, பல சமய நாடா­கத் திக­ழும் சிங்­கப்­பூர் குறித்­துப் பேசிய பிர­த­மர் லீ சியன் லூங் எடுத்­துக்­காட்­டாக இந்த அக்கம் பக்கத்தாரைக் குறிப்­பிட்­டுப் பேசினார்.

1993ல் அந்­தக் குடி­யி­ருப்பு கட்­டப்­பட்­ட­போது முத­லில் குடி­யே­றி­ய­வர்­களில் தக­வல் தொழில்­நுட்ப நிர்­வாக ஊழி­ய­ரான அலஸ்­டைர் டான், 57, இல்­லத்­த­ர­சி­யான திரு­வாட்டி கேத்­த­ரினா பீ, 56, தம்­ப­தி­யும் ஒன்று.

2011இல் அங்கு குடி­யே­றிய திரு­வாட்டி சிம், அவ­ரது கண­வர் ஜெஃப்ரி கோ, 77, தம்­ப­தியை, டான் தம்­ப­தி­யி­னர் வர­வேற்று அவர்­க­ளுக்கு நட்­பான சூழலை ஏற்­ப­டுத்தினர்.

உதா­ர­ண­மாக, ஏறக்­கு­றைய ஏழு ஆண்­டு­க­ளுக்கு முன்பு அந்த தளத்­தில் வசிப்­போர் உண­வைப் பகிர்ந்­து­கொண்டு, ஒரு­வ­ரை­யொருவர் நன்கு தெரிந்­து­கொள்ள பொது நடை­பா­தை­யில் விருந்­துக்கு ஏற்­பாடு செய்­தார் திரு டான்.

கொவிட்-19 தொற்­று­நோய் சூழ­லில் இவை நிறுத்­தப்­பட்­டா­லும், அவ­ரும் அவ­ரது மனை­வி­யும் ஆண்­டிற்கு பல முறை இந்த விருந்­துக்கு ஏற்­பாடு செய்­த­னர்.

"நல்ல, நட்­பான அண்டை வீட்­டா­ரைப் பெற்­றி­ருப்­பது முக்­கி­யம். இது ஒரு குடும்­பம் போன்­றது," என்­றார் ஓய்­வு­பெற்ற மூத்த நிர்­வாக தயா­ரிப்­பா­ள­ரான திரு கோ.

இந்த உணர்வை ஓய்­வு­பெற்ற ஓட்­டு­நர் 63 வயது திரு சிங்­க­வேலு ராஜேந்­தி­ர­னும் பகிர்ந்­து­கொண்­டார். அவர் தீபா­வ­ளி­யின்­போது தமது சீன அண்டை வீட்­டா­ருக்கு பாரம்­ப­ரிய சிற்­றுண்­டி­களை வழங்­கு­வார். அவர்­கள் சீனப் புத்­தாண்­டின்­போது அவ­ருக்­குச் சிற்­றுண்­டி­களை வழங்­கு­வர்.

"நாங்­களோ அல்­லது அண்டை வீட்­டாரோ வெளி­யூர் சென்­றால், ​​எங்­கள் வீடு­களை பார்த்­துக்­கொள்ள ஒரு­வ­ரை­யொ­ரு­வர் நம்­பி­யி­ருப்­போம்," என்­றார் நிர்­வாக ஊழி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் அவ­ரது 63 வயது மனைவி மகேஸ்­வரி கோவிந்­த­சாமி.

திரு­வாட்டி சிம் அவ­ரது அண்டை வீட்­டார் வெளி­நாட்­டுக்­குச் சென்­றி­ருந்­தால், செடி­க­ளுக்­குத் தண்­ணீர் ஊற்ற உத­வு­கி­றார். மேலும், துணி­து­வைத்த தண்­ணீ­ரைப் பயன்­ப­டுத்தி மின்­தூக்­கித் தளத்தை அடிக்­கடி கழு­வு­வார்.

பிர­த­மர் லீ தமது உரை­யில் சுட்­டிக்­காட்­டிய உயர்மாடிக் குடியிருப்பு வாழ்க்கையில் உண்­மை­யான 'கம்பத்து' உணர்வைக் கொண்டுள்ள குடும்பங்கள் இவை.

சிங்­கப்­பூர் பல இனங்­கள், பல சம­யங்­கள் வாழும் நாடாக திகழ்­கிறது என்­ப­தை­யும் ஒவ்­வொ­ரு­நா­ளும் மன­தைத் தொடும் உற­வா­டல்­கள் பல நடக்­கின்­றன என்­ப­தை­யும் பிர­த­மர் குறிப்­பிட்­டுப் பேசி­னார்.