சிங்கப்பூரில் சீனர்களுக்குச் சிறப்புச் சலுகை என்பது அடிப்படையற்ற வாதம்

சிங்கப்பூரில் சீனர்களுக்குச் சிறப்புச் சலுகை என்பது அடிப்படையற்ற வாதம்

2 mins read
03b2f77a-d2ec-4e3c-b4ce-2d08d806d733
-

சிங்­கப்­பூ­ரில் எல்லா இனத்­த­வ­ரும் சம­மாக நடத்­தப்­ப­டு­கின்­றனர் என்­றும் எந்த இனத்­துக்­கும் சிறப்­புச் சலுகை தரப்­ப­டு­வ­தில்லை என்­றும் பிர­த­மர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். தேசிய தினப் பேரணி உரையில் நேற்று மாண்­ட­ரின் மொழி­யில் உரை­யாற்­றி­ய­போது அவர் அவ்­வாறு கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் சீனர்­க­ளுக்­குச் சலுகை உள்­ளது என்ற வாதம் அடிப்­ப­டை­யற்­றது என்­றார் அவர்.

அதே நேரத்­தில் சிறு­பான்மை இனத்­தவ­ரின் கவ­லை­க­ளை­யும் பிரச்­சி­னை­க­ளை­யும் புரிந்­து­கொண்டு இணக்­க­மாக நடந்­து­கொள்­ளும்­படி இங்­குள்ள பெரும்­பான்மை இன­மான சீனர்­க­ளைப் பிர­த­மர் லீ கேட்டுக்­கொண்­டார்.

சிங்­கப்­பூர், நாடான தொடக்­கத்­திலிருந்து இனங்­க­ளின் சமத்­து­வம்­தான் அடிப்­படைக் கொள்கை என்­ப­தில் நாட்டை உரு­வாக்­கிய தலை­வர்­கள் உறு­தி­யாக இருந்­த­னர்.

அர­சாங்­கம் எந்த இனத்­துக்­கும் பார­பட்­சம் காட்­டாது நடு­நி­லை­யாக சட்­டங்­க­ளை­யும் நிர்­வாக நடை­முறை­க­ளை­யும் உரு­வாக்­கி­யது என்று பிர­த­மர் சொன்­னார்.

சீனச் சமூ­கத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட இத்­தொ­டக்­க­கால அடிப்படைக் கொள்கை, சிங்­கப்­பூ­ரின் பல்­லின நல்­லி­ணக்கத்­தின் அடி­நா­த­மாகி உள்­ள­தாக அவர் கூறி­னார்.

"நாட்­டின் நல­னுக்கு சீன சிங்­கப்­பூ­ரர்­கள் சில­வற்றை விட்­டுக்­கொ­டுத்­த­னர். உதா­ர­ணத்­துக்கு சிறு­பான்மை இனத்­த­வர் சங்­க­டப்­படா­மல் இருப்­ப­தற்­காக, ஆங்­கி­லத்தைப் புழங்­கு­மொ­ழி­யாக ஏற்­றுக்­கொண்­டோம். மாண்­ட­ரி­னை­யும் மற்ற கிளை­மொ­ழி­க­ளை­யும் பேசு­வோர் இத­னால் பாதிக்­கப்­பட்­ட­னர்," என்­றார் அவர்.

இன அடிப்­ப­டை­யில் ஆதிக்­கம் செலுத்­து­வ­தைச் சுட்­டும் 'சீன­ருக் குச் சலுகை' எனும் சொற்­றொ­டர் இங் குள்ள சூழலுக்கு ஏற்றதா என்பது விவா­தத்தை உண்­டாக்­கி­யது. சீன சமூ­கத்­தில் சிலர் தங்கள் சமூ­கம் பல­வற்­றை­யும் விட்­டுக்­கொ­டுத்­துள்­ள­தா­கக் கரு­த­லாம் என்று கூறிய திரு லீ, இனச் சமத்­து­வம் எனும் கொள்கை சீனர்­கள் உட்பட எல்லா இனத்­த­வ­ருக்­கும் நன்மை அளித்­துள்­ளது என்­றார்.

எனி­னும், பல்­லாண்­டு­கால அமை­தி­யால் இன நல்­லி­ணக்­கம் குறித்த மெத்­த­னம் ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்­றும் சிங்­கப்­பூ­ரர்­கள் அது­பற்றி அதி­கம் கவ­னிக்­காதிருக்­க ­லாம் என்­றும் பிர­த­மர் கூறி­னார்.

சில சீன சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குச் சிறு­பான்மை இனத்­த­வ­ரின் உணர்வு­கள் தெரி­யா­மல் இருக்­க­லாம் என்ற பிர­த­மர், வீடு­களை வாட­கைக்கு எடுப்­ப­தி­லும் வேலை தேடு­வ­தி­லும் சிறு­பான்மை இனத்­த­வர் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­வ­தைக் குறிப்­பிட்­டுப் பேசி­னார்.

சில சீன சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ஒரு குறிப்­பிட்ட இனத்­த­வ­ருக்கு வீட்டை வாட­கைக்­குத் தரப் பிடிக்­கா­தி­ருக்­க­லாம். எல்லா வீட்டு உரி­மை­யா­ளர்­களும் அப்­படி இல்லை எனும்­போ­தும், அத்­த­கைய பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­ளும் சிறு­பான்மை இனத்­த­வ­ரின் உணர்வு களைப் புரிந்­து­கொள்­வதில் அதி­கச் சிர­மம் இருக்­காது என்­றார் அவர்.

வேலை­க­ளைப் பொறுத்­த­வரை, சில வேலை­க­ளுக்­குச் சீன­மொ­ழித் திறன் தேவைப்­பட்­ட­போ­தும், தேவைப்­ப­டாத வேலை­க­ளி­லும் அது தகு­தி­யா­கக் குறிப்­பி­டப்­ப­டும்­போது, சிறு­பான்மை இனத்­த­வ­ருக்கு அது நியா­ய­மற்ற ஒன்­றாக தெரி­யக் கூடும் என்று திரு லீ விளக்­கி­னார்.

பொது­வெ­ளி­யில் இன அடிப்­ப­டை­யி­லான விருப்­பு­வெ­றுப்­பு­கள் காலப்­போக்­கில் பார­பட்­ச­மாக மாறி சிறு­பான்மை இனத்­த­வர் தங்­க­ளுக்கு எதி­ராக பாகு­பாடு உள்­ள­தாக கரு­தும் நிலைக்கு இட்­டுச் செல்­லாம் என்­றார் திரு லீ.