வேலையிட பாகுபாட்டுக்கு எதிராக இருந்து வரும் வழிகாட்டுதல்கள் இனி சட்டமாக்கப்படும். இதனால் வேலையிடத்தில் ஊழியர்கள் நியாயமாக நடத்தப்படுவது தொடர்பில் மேலும் அதிகமான தெரிவுகளை அரசாங்கம் பெறும் என்றார் பிரதமர் லீ.
"சிங்கப்பூரர்களுக்கு எதிரான நியாயமற்ற வேலை நியமன நட
வடிக்கைகளைக் கையாள இது உதவும். வேலையிட பாகுபாட்டை எதிர்கொள்ள நடைமுறையில் இருக்கும் டஃபெப் (TAFEP) எனும் நடு
நிலையான வேலைவாய்ப்பு நடைமுறைகள் மீதான முத்தரப்பு வழிகாட்டுதல்கள் சட்டபூர்வமாக்கப்
படுவது பெரியதொரு முடிவு. வேலையிடங்களில் பாகுபாடுகள் இருப்பதை சிங்கப்பூர் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கு இது ஓர் அறிகுறி," என்றார் பிரதமர்.
வேலைகள், வேலையிட வாய்ப்புகள் ஆகியன தொடர்பில் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போருடன் நடுத்தர வருமான சிங்கப்பூரர்கள் போட்டியிடுவது தொடர்பில் எழுந்து வரும் கவலைகளை குறிப்பிட்ட திரு லீ, இதனால், வேலையிட பாகுபாட்டைக் கையாள்வதற்கென ஒரு தீர்ப்பாயத்தை உருவாக்குவது அரசாங்கத் திட்டங்களில் முக்கியமான ஒன்று என்றார்.

