சிங்டெல்லின் 5ஜி கட்டமைப்பில் 180,000 பேர்

சிங்டெல்லின் 5ஜி கட்டமைப்பில் 180,000 பேர்

1 mins read
d11e8d02-be83-4cc4-b102-810458485d4f
-

சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரிய தொலைத்­தொ­டர்பு நிறு­வ­ன­மான சிங்­டெல், ஐந்­தாம் தலை­முறை (5ஜி) செய­லி­களை வெளி­ யி­டத் தொடங்கி உள்­ளது. 4K காணொ­ளிப் படங்­கள் முதல் ரிமோட் கண்ட்­ரோல் கார்­களை ஓட்­டும் வசதி தரும் விளை­யாட்டுகள் வரை அந்த செய­லி­களில் இடம்­பெற்­றுள்­ளன. 5ஜி கட்­ட­மைப்­புக்­கான சோதனை ஓட்­டம் கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் தொடங்­கி­யது முதல் 180,000க்கும் மேற்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­கள் அதில் இணைந்­தி­ருப்­ப­தாக சிங்­டெல் நேற்று தெரி­வித்­தது. ஜூன் மாதம் 30ஆம் தேதி நில­வ­ரப்­படி, அந்­

நி­று­வ­னத்­தில் 4.1 மில்­லி­யன் கைபேசி வாடிக்­கை­யா­ளர்­கள் உள்­ள­னர்.

5ஜி தொழில்­நுட்­பக் கட்­ட­மைப்பு தற்­போ­துள்ள 4ஜி கட்­ட­மைப்­பைக் காட்­டி­லும் அதி­க­

வே­கத்­தில் இயங்­கக்­கூ­டி­யது. ஹெச்டி எனப்­படும் உயர் ரக ஒலி, ஒளி அம்­சங்­களை சில விநா­டி­களில் பதி­வி­றக்­கம் செய்­யும் வச­தியை அது வழங்­கு­கிறது. தற்­போது நடப்­பில் உள்ள 4ஜி கட்­ட­மைப்­பைப் பயன்­ப­டுத்தி அவற்­றைப் பதி­வி­றக்­கம் செய்ய பல நிமி­டங்­கள் தேவைப்­படும். மேலும், பல சாதனங்களை இணைக்கும் அளவுக்கு வலுவான அலைவரிசையை 5ஜி கொண்டிருக்கும்.