பங்குதாரர்களின் ஆதரவை நாடும் எஸ்பிஹெச்

பங்குதாரர்களின் ஆதரவை நாடும் எஸ்பிஹெச்

1 mins read
5c41ed9e-cc3b-4f39-b8f2-85ae9bc851bc
-

ஊடக வர்த்­த­கத்­தைத் தனி­யா­கப் பிரிக்­கும் திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிக்­கு­மாறு சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் தனது பங்­கு­தா­ரர்­கை­ளக் கேட்­டுக்­கொள்ள இருக்­கிறது. செப்­டம்­பர் 10ஆம் நடை­பெற உள்ள பொதுக்­கூட்­டத்­தில் இந்த வேண்­டு­கோள் வைக்­கப்­பட இருப்­ப­தாக அதன் அங்­கீ­கா­ரப் பிர­தி­நிதி நிறு­வ­ன­மான கிளாஸ் லெவிஸ் கூறி­யது.

ஊடக வர்த்­த­கத்­தின் கணி­ச­மான தொடர் நஷ்­டத்­தை­யும் மாற்று வர்த்­த­கத்­திற்கு வரை­ய­றுக்­கப்­பட்ட அள­வி­லேயே வாய்ப்பு இருப்­ப­தை­யும் கவ­னத்­தில் கொண்டு, உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள மறு­கட்­ட­மைப்பு நடைமுறையை பங்­கு­தாரர்­கள் ஆத­ரிப்­பார்­கள் என்று அந்த அமெ­ரிக்க நிறு­வ­னம் தனது அறிக்­கை­யில் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

எஸ்பிெஹச் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட எவர்கோர் ஏஷியா (சிங்கப்பூர்) என்னும் சுய நிதி ஆலோசனை நிறுவன மும் இருவாரங்களுக்கு முன் இதே கருத்தைத் தெரிவித்தி ருந்தது. ஊடக வர்த்தகத்தை மறுசீரமைக்கும் உத்தேசத் திட்டம் ஒட்டுமொத்த நிறு வனம் மற்றும் பங்குதாரர்களின் முடிவைப் பொறுத்தது என்று ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளி யிட்ட கடிதத்தில் அது கூறியது.