லண்டனில் பட்டக் கல்வி பயின்றுகொண்டிருந்த 24 வயது எஸ்டர் டான் லிங் யிங், சென்ற ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி படிப்பை முடிக்காமல் சிங்கப்பூர் திரும்பினார்.
பிரிட்டனை விட்டு கிளம்புவதற்கு முன்பே சளிக்காய்ச்சலுக்கான அவருக்கு அறிகுறிகள் ஏற்பட்டு, ருசிக்கும் முகரும் ஆற்றல்களையும் அவர் இழந்தார்.
ஆனால் அவர் மருத்துவரைக் காணாமல் லண்டனிலிருந்து கிளம்பும் வரை தம்மைத் தாமை தனிமை படுத்திக்கொண்டார்.
சிங்கப்பூரை வந்தடைந்தபோது அப்பெண்ணிடம் உடனே வீடு திரும்பும்படி கூறப்பட்டு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவும் விதிக்கப்பட்டது.
இருப்பினும், அவர் தம் பெற்றோருடன் விமான நிலையத்தில் உள்ள உணவங்காடியில் உணவு உண்டார். பின்னர் எம்ஆர்டி வழி வீட்டிற்கு அருகிலுள்ள மருந்தகத்துக்குச் சென்றார்.
மேலும் தாம் ஜனவரி மாதமே சிங்கப்பூர் திரும்பியதாகவும் சமீப காலத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பவில்லை என்றும் மருத்துவரிடம் பொய் கூறி மருந்துகளை வாங்கினார்.
டானிற்கு மார்ச் 30ஆம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது தமக்கு விதிக்கப்பட்ட வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு தெளிவாக இல்லை என்றும் தமக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்று தாம் நினைக்கவில்லை என்றும் டான் கூறினார். நோய்த்தொற்றுத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு 12 வார சிறை தண்டனை விதிக்கப்கப்பட்டது.

