இளநீர் விற்பனை கூடியது

இளநீர் விற்பனை கூடியது

2 mins read
5a14f32d-b0e2-4c72-bb49-56f6307dd050
231 சுமாங் லேனில் செயல்படும் ஷெங் சியோங் கடையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள போத்தல் இளநீர் பானங்கள். படம்: திமத்தி டேவிட் -

கொவிட்-19 தடுப்பூசிக்குப் பிந்திய பக்க விளைவுகளைக் குறைப்பதாக நம்பிக்கை

சிங்­கப்­பூ­ரில் இள­நீர் விற்­பனை கூடி­ இருக்­கிறது.

இள­நீர் பரு­கு­வோ­ரில் சிலர், அந்த பானம் கொவிட்-19 தடுப்­பூ­சி­யால் ஏற்­ப­டக்­கூ­டிய காய்ச்­சல் போன்ற பக்க விளை­வு­க­ளைத் தணிக்­க­வல்­லது என்று நம்­பு­கின்­றனர்.

இவ்­வாண்டு ஜூன் மாதத்தை ஒப்­பிட, ஜூலை­யில் இள­நீர் விற்­பனை 140% கூடி­ய­தாக இள­நீர் பான இறக்­கு­மதி, விநி­யோக நிறு­வ­ன­மான 'சியாம் கோக்­க­நட்' தெரி­வித்­துள்­ளது. அதே கால­கட்­டத்­தில், இள­நீர்க்குலை விற்­ப­னை­யும் 70% கூடியதாக அந்­நி­று­வ­னம் கூறி­யது.

"இள­நீர்க் கலவை பானம் தயா­ரிக்­க­வும் குழு­வா­கச் சேர்ந்து மொத்­த­மா­க­வும் தென்­னங்­கு­லை­களையும் இள­நீர் பான­ங்களையும் வாங்­கு­கின்­ற­னர். தடுப்­பூசி போட­ இருப்­பதை அறிந்து, நண்­பர்­க­ளுக்­கும் குடும்­பங்­க­ளுக்­கும் இள­நீ­ரைப் பரி­சாக அளிப்­போ­ரும் உள்­ள­னர்," என்­றார் சியாம் கோக்­க­நட் நிறு­வனத்­தின் பொது மேலா­ளர் கெல்­வின் நியான்.

இவ்­வாண்டு முற்­பா­தி­யைக் காட்­டி­லும், கோல்டு ஸ்டோ­ரேஜ், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், ரெட்­மார்ட் போன்ற சில்­லறை விற்­பனைக் கடை­களில் தனது 'கோக்­கோ­வாட்­டர்' பானத்தை இரு­ம­டங்கு வேகத்­தில் நிரப்பி வரு­வ­தாக 'புரூ­வனன்ஸ் டிஸ்­டி­ரி­பி­யூ­ஷன்ஸ்' நிறு­வனம் தெரி­வித்­தது.

கடந்த ஏப்­ரல் மாதத்­தில் இருந்து விற்­பனை உய­ரத் தொடங்­கி­ய­தா­கக் குறிப்­பிட்ட அந்­நி­று­வ­னத்­தின் இயக்­கு­நர் கெவின் டான், ஜூன் மாதத்­திற்கு முன்­பி­ருந்­த­தை­விட இப்­போது விற்­பனை 60% கூடி­ இ­ருப்­ப­தா­கச் சொன்­னார்.

'ஐஸ் கூல்', 'யுஎ­ஃப்சி ரெஃப்ரெஸ்' ஆகிய வேறு இரு நிறு­வ­னத் தயா­ரிப்­பு­க­ளின் விற்­பனை­யும் அதி­க­ரித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்டு பிப்­ர­வரி 22 முதல் பேர­ள­வில் கொவிட்-19 தடுப்­பூசி போடு­வது தொடங்­கி­யது. பொது­வாக, தடுப்­பூசி போடு­வ­தால் காய்ச்­சல், சோர்வு, குளிர் நடுக்­கம், தசை­வலி ஆகிய பக்க விளை­வு­கள் ஏற்­ப­ட­லாம்.

பக்க விளை­வு­க­ளின் கடு­மை­யைத் தணிக்க உத­வு­வ­தாக நண்­பர்­கள் கூறி­யதை அடுத்து, இள­நீர் பானத்தை வாங்கி அடுக்கி வைத்­துள்­ளார் விற்­ப­னைப் பிர­தி­நி­தி­யான ஷெரில் லின், 26.

"இரண்­டா­வது தடுப்­பூசி போட்ட பிறகு எனக்­குக் காய்ச்­சல் வந்­தது. ஒரு போத்­தல் இள­நீர் அருந்­தி­ய­பின் காய்ச்­ச­லில் இருந்து விரை­வாக மீண்­டேன்; அதிக ஆற்­ற­லு­டன் இருப்­ப­தா­க­வும் உணர்ந்­தேன்," என்­றார் அவர்.

ஆனால், காய்ச்­சல் அல்­லது தசை­வலி போன்­ற­வற்­றின் கடு­மை­யைத் தணிக்க இள­நீர் உத­வும் என்­ப­தற்கு எந்­த­வொரு சான்­றும் இல்லை என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

"பொட்­டா­சி­யம், சோடி­யம், மேங்­க­னீஸ் போன்ற மின்­ப­கு­பொருள்­கள் உள்­ள­போ­தும், சாதா­ரண நீரைக் காட்­டி­லும் இள­நீர் உட­லில் நீர்ச்­சத்தை அதி­க­ரிக்­கும் என்­ப­தற்­குச் சான்­று­கள் இல்லை," என்­றார் நார்த்­ஈஸ்ட் மருத்­து­வக் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி டாக்­டர் டான் டெக் ஜாக்.

ஆனா­லும், மற்ற விளை­யாட்­டுப் பானங்­களில் உள்­ள­தைப் போன்ற மின்­ப­கு­பொ­ருள்­கள் இள­நீ­ரில் உள்­ள­தால், வெகு­நே­ரம் கடும் காய்ச்­ச­லால் அல்­லது மிகுந்த நீர்ச்­சத்து இழப்­பால் அவ­திப்­ப­டு­வோர் இள­நீர் அருந்­து­வது பய­ன­ளிக்­க­லாம் என்று அவர் சொன்­னார்.

பொது­வாக, பானங்­களை அருந்­து­வது குளிர் நடுக்­கம், அழற்சி போன்­ற­வற்­றைக் குறைக்க உத­வும் என்­றார் சிராங்­கூ­னில் உள்ள மிஷன் மருந்­த­கத்­தின் மருத்­து­வர் லியோங் சூன் கிட்.

"அது இள­நீ­ரா­கத்­தான் இருக்க வேண்­டும் என்­ப­தில்லை. வடி­சாறு (சூப்), 'ஐசோ­டா­னிக்' பானங்­கள், சாதா­ரண நீர் போன்ற எல்லா பானங்­களும் உத­வும்," என்று டாக்­டர் லியோங் கூறி­னார்.