சமூகத்தில் புதிதாக 156 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் 48 பேர் முன்னர் கிருமி தொற்றியோருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தொடர்பிருந்த வகையில் 29 பேரை கொரோனா தொற்றியது கண்காணிப்புப் பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோரில் எஞ்சிய 79 பேர்க்கும் எந்தவொரு கிருமித் தொற்றுக் குழுமத்துடனும் தொடர்பிருந்ததாகத் தெரியவில்லை.
வெளிநாட்டில் இருந்து வந்த ஐவரைக் கிருமி தொற்றியிருப்பதும் உறுதியானது. மொத்தத்தில், நேற்று புதிதாக 161 புதிய பாதிப்புகள் பதிவாயின.
இரு புதிய தொற்றுக்குழுமங்கள்
முன்னதாக, தெம்பனிஸ் பேருந்துச் சந்திப்பு நிலையம், மனநலக் கழகம் என மேலும் இரு புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகி இருப்பதாக அமைச்சு அறிவித்தது.
நேற்று முன்தின நிலவரப்படி, தெம்பனிஸ் பேருந்துச் சந்திப்பு நிலையக் குழுமத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் சேர்த்து, இப்போது எட்டுப் பேருந்துச் சந்திப்பு நிலையங்கள் கிருமித்தொற்றுக் குழுமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மனநலக் கழகத் தொற்றுக் குழுமத்தில் அறுவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்து இருக்கும் இரு உள்நோயாளிப் பிரிவுகளைச் சேர்ந்த தாதி ஒருவர், சுகாதார உதவியாளர் ஒருவர், நோயாளிகள் நால்வர் அவர்களில் அடங்குவர்.
பணியாளர்கள் இருவரும் நோயாளிகளில் ஒருவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுவிட்டனர். மற்ற மூன்று நோயாளிகளும் இன்னும் தடுப்பூசி போடவில்லை.
ஒட்டுமொத்தத்தில், சிங்கப்பூரில் இதுவரை 67,620 பேரைக் கிருமி தொற்றிவிட்டது;

