வானிலை முன்னுரைப்பு கொண்டு நடவடிக்கையைத் திட்டமிடவும்

2 mins read
66b9af66-43ad-4da9-9c26-13acd429bbe4
-

பரு­வ­நிலை மாற்­றத்­தால் நாளுக்கு நாள் கணிக்க முடி­யாத வானிலை நிலவி வரு­கிறது. இத­னால், வானிலை முன்­னு­ரைப்பை அடிக்­கடி அறிந்­து­கொள்­வதை மக்­கள் பழக்­க­மாக்­கிக்­கொள்ள வேண்­டும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ தெரி­வித்­துள்­ளார்.

அவ்­வாறு அறிந்­து­கொண்டு தங்­க­ளின் நட­வ­டிக்­கை­களில் தகுந்த மாற்­றங்­களை அவர்­கள் செய்­து­கொள்­ள­லாம் என்­றும் அவர் நேற்று கூறி­னார்.

"பரு­வ­நிலை மாற்­றத்­தால் மழை மேலும் கடு­மை­யா­கப் பெய்து வரு­கிறது. அத­னால், திடீர் வெள்­ளம் ஏற்­ப­டு­வதை முற்­றி­லும் தடுப்­பது என்­பது சாத்­தி­யப்­ப­டாது," என்­றார் அவர். பல கால­மாக சிங்­கப்­பூ­ரின் வானிலை நன்கு பரிச்­ச­ய­மா­கி­விட்ட நிலை­யில் சிங்­கப்­பூ­ரர்­கள் உள்­ள­னர். வானி­லை­யில் அதிக மாற்­றம் இருக்­காது என்று நினைத்­து­விட்­ட­னர்.

"ஆனால் வானிலை முன்­னு­ரைப்பை அறிந்­து­கொள்­ளும் பழக்­கத்தை நாம் ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும். ஒரு நாட்டு மக்­க­ளாக நமது தயார்­நி­லை­யின் ஓர் அங்­கம் அது," என்று இணை­யக் கருத்­த­ரங்கு ஒன்­றில் திரு­வாட்டி ஃபூ பேசி­யி­ருந்­தார். பரு­வ­நிலை மாற்­றத்­திற்­கான ஐக்­கிய நாடு சபை­யின் அர­சாங்­கங்­க­ளுக்கு இடை­யி­லான ஆலோ­ச­னைக் குழு (ஐபி­சிசி) கடந்த மாதம் அறிக்கை வெளி­யிட்­டதை அடுத்து சிங்­கப்­பூர் மீதான தாக்­கங்­கள் குறித்து அமைச்­சர் ஃபூ நேற்று பேசி­னார்.

அனைத்­து­லக ரீதி­யான வெளி­யேற்­றங்­கள் 2050ஆம் ஆண்­டுக்­குள் பூஜ்­ஜி­யத்தை எட்­டா­விட்­டால் எதிர்­பாரா வானி­லை­யை­யும் பரு­வ­நிலை மாற்­றத்­தின் விளை­வாக மேலும் கடு­மை­யான பாதிப்­பு­க­ளை­யும் உல­கம் சந்­திக்க நேரி­டும் என்று மனித இனத்­திற்கு பரு­வ­நிலை அறி­வி­யல் நிபு­ணர்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளதை ஐபி­சிசி அறிக்கை குறிப்­பிட்­டி­ருந்­தது.

உல­கம் வெப்­ப­ம­ய­மா­தல் சிங்­கப்­பூ­ரை­யும் பாதிக்­கும். மேலும் வெப்­ப­மான தட்­ப­வெப்­ப­நி­லை­யை­யும் கடல் மட்­டம் உயர்­தல் தொடர்­பான எதிர்­பாரா சம்­ப­வங்­க­ளை­யும் சிங்­கப்­பூர் சந்­திக்­கும் என்று கூறப்­பட்­டது.

கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்­க­வும் பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு ஏற்ப மாறிக்­கொள்­ள­வும் நாட­ளா­விய முயற்­சி­கள் பல நடந்து வந்­தா­லும் சிங்­கப்­பூர் முத­லில் 'சமூக மீள்­தி­றன்' போக்­கு­டன் பரு­வ­நிலை மாற்­றத்­தைக் கையாள வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார் திரு­வாட்டி ஃபூ.

கடும் மழைப் பொழி­வுக்­குத் தயார்­ப­டுத்­திக்­கொள்­ளும் நோக்­கில், கடந்த பத்­தாண்டு கால­மாக வடி­கால் பணி­க­ளுக்­காக பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் ஏறத்­தாழ $2 பில்­லி­யனை முத­லீடு செய்­துள்­ளது. அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளாக வெள்ள மீள்­தி­றனை மேம்­ப­டுத்த கழ­கம் மேலும் $1.4 பில்­லி­யனை முத­லீடு செய்­ய­வுள்­ளது.

நகர்ப்­பு­றப் பசு­மையை அதி­க­ரிப்­பது, 'குளி­ரூட்­டிச் சாயங்­கள்' போன்ற மூலப்­பொ­ருட்­களை அதி­க­மா­கப் பயன்­ப­டுத்தி வெப்­பத்­தைத் தணிப்­பது போன்ற அம்­சங்­க­ளை­யும் அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­வ­தாக திரு­வாட்டி ஃபூ தெரி­வித்­தார்.