சட்டங்களால் ஊழியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்

2 mins read
1cdd5315-8883-437f-8109-0c11f0f5d9c7
-

வேலையிடப் பாகுபாடு தொடர்பில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்

வேலை­யி­டப் பாகு­பாடு சிங்­கப்­பூ­ரில் மோச­ம­டைந்து வரும் ஒரு பிரச்­சினை இல்லை என்­றா­லும் சில ஊழி­யர்­கள் அந்­நி­லைக்கு ஆளா­வது உண்டு என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் கூறி­யுள்­ளார். எனவே, இது தொடர்­பில் சட்­டம் உரு­வாக்­கப்­பட்­டால் தற்­போது வேலை­யி­டப் பாகு­பாட்­டிற்கு எதி­ரான வழி­காட்­டு­தல்­கள் மேலும் வலுப்­பெ­றும் என்­றார் அவர்.

வேலை­யி­டப் பாகு­பாட்டை எதிர்­கொள்ள நடை­மு­றை­யில் இருக்­கும் டாஃபெப் (TAFEP) எனும் நடு­நிலை­யான வேலை­வாய்ப்பு நடை­மு­றை­கள் மீதான முத்­த­ரப்பு வழி­காட்­டு­தல்­க­ளைச் சட்­ட­பூர்­வ­மாக்­கும்­போது, வேலை­யி­டத்­தில் நியா­ய­மான நடை­முறை இருப்­பது குறித்து சிங்­கப்­பூர் வெளிப்­ப­டை­யாக நடந்து­கொள்­கிறது என்­ப­தை­யும் வலி­யுறுத்­தும் என்று நேற்று காலை வானொலிப் பேட்டி ஒன்­றில் டாக்­டர் டான் பகிர்ந்­து­கொண்­டார்.

வேலை­யி­டப் பாகு­பாட்­டுக்கு எதி­ரான சட்­டம் குறித்து பிர­த­மர் லீ சியன் லூங் தமது தேசிய தின பேரணி உரை­யில் அறி­வித்­தி­ருந்­தார். முத­லா­ளி­க­ளுக்­கி­டையே ஏற்­படக்­கூ­டிய பாகு­பாட்­டைக் கையாள 'டாஃபெப்' உத­வு­கிறது.

"கொள்­ளை­நோய் கார­ணத்­தால் நாம் பல திட்­டங்­களில் ஈடு­ப­ட­வில்லை, இப்­போது மீண்­டும் முன் நின்று செயல்­ப­டத் தயா­ராக இருக்­கி­றோம். நிறு­வ­னங்­கள் தங்­களை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும், தொழில்­துறை உரு­மாற்­றம் வேண்­டும், புத்­தாக்­கம் வேண்­டும் என்­றெல்­லாம் நாம் ஊக்­கு­விக்­கி­றோம்.

"அதே சம­யம், நம் உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்­கான பாது­காப்பு இருப்­ப­தை­யும் நாம் வலி­யு­றுத்த விரும்­பு­கி­றோம்," என்­றார் டாக்­டர் டான்.

ஆண் பெண் வேறு­பாடு, வயது, இனம், சம­யம், குறை­பாடு இருத்­தல் போன்ற அம்­சங்­கள், பாகு­பாட்டை எதிர்க்­கும் இப்­பு­திய சட்டங்க­ளின்­கீழ் வரும். இத­னால், குற்­றம் புரி­யும் முத­லா­ளி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும் அதி­கா­ரம் அம­லாக்க அமைப்­பு­களுக்கு வழங்­கப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், புதிய சட்­டத்­தால் சிங்­கப்­பூ­ரில் தங்­க­ளின் நிறு­வ­னங்­களை அமைக்­கச் சிலர் தயங்­க­லாம் என்ற அக்­க­றைக்­கு­ரிய அம்­ச­மும் பேசப்­ப­டு­கிறது. அந்­நிலை நேராது என்­றார் டாக்­டர் டான்.

பாகு­பாடு போக்கு இங்­குள்ள பெரும்­பா­லான நிறு­வ­னங்­க­ளி­டம் இல்லை என்று அவர் குறிப்­பிட்­டார். தவறு செய்­யக்­கூ­டிய அந்­தக் குறைந்த எண்­ணிக்கை நிறு­வ­னங்­களை­யும் சரி­யான திசைக்­குத் திருப்ப சட்­டம் உத­வும் என்­றார்.

நாடு தொடர்ந்து முன்­னேற வேண்­டும் என்­றால், அனை­வ­ரை­யும் வர­வேற்­கும் ஓர் இட­மாக சிங்­கப்­பூர் இருக்க வேண்­டும். புதுத் திறன், திறன் மேம்­பாடு தொடர்­பிலான முயற்­சி­களும் உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்­காக மேற்­கொள்­ளப்­படும் என்­றார் அவர்.

"மாற்­றம் ஒன்றே மாறா­தது. அதைப் புரிந்­து­கொண்டு நாம் மாற்­றத்தை ஏற்­றுக்­கொள்­ளும் பக்­கு­வத்தை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும், சுறு­சு­றுப்­பு­டன் செயல்­பட வேண்­டும், புத்­தாக்­க­மிக்க ஒரு சமூ­க­மாக விளங்க வேண்­டும். அதுவே நம் இலக்கு," என்­றார் டாக்­டர் டான்.