தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய திட்டங்களுடன் 'டிமென்ஷியா சிங்கப்பூர்'

2 mins read
1ca61edb-91b8-47cf-b91a-87b83170f8cd
'டிமென்ஷியா சிங்கப்பூர்' என்று பெயர் மாற்றம் கண்டுள்ள அல்ஸய்மெஸ் நோய்ச் சங்கம், நோயாளிகளுக்கும் அவர்களைப் பராமரிப்போருக்கும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தவுள்ளது. படம்: டிமென்ஷியா சிங்கப்பூர் -

முது­மைக்­கால மற­தி­நோ­யு­டன் தவிக்­கும் நோயா­ளி­க­ளுக்­கா­க­வும் அவர்­க­ளின் பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்­கா­க­வும் புதிய ஆத­ர­வுத் திட்­டங்­களை 'டிமென்­ஷியா சிங்­கப்­பூர்' நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ளது. இதற்கு முன் 'அல்­ஸய்­மெஸ் நோய்ச் சங்­கம்' என்ற பெய­ரில் இது 1990ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்­தது.

வளங்­கள் கொண்ட இணை­யத்­த­ளம், உறுப்­பி­னர் திட்­டம், வர்த்­தகங்­க­ளுக்­காக அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கு­வ­தற்­கான உத­வித் தொகுப்பு, உதவி பெறும் சூழலை வழங்­கும் திட்­டம் போன்ற பல்­வேறு திட்­டங்­கள் குறித்து ஃபேஸ்புக் மூலம் அதி­பர் ஹலிமா யாக்­கோப் தமது உரை­யில் நேற்று அறி­வித்­தார். இணை­யத்­த­ளத்­தின் வளங்­களும் வர்த்­த­கங்­க­ளுக்­கான உத­வித் தொகுப்­பும் இம்­மா­தம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். உறுப்­பி­னர் திட்­ட­மும் உதவி பெறும் சூழலை ஏற்­ப­டுத்­தித் தரும் திட்­ட­மும் நவம்­பர் மாதம் தொடங்­கும் என்று கூறப்­பட்­டது. டிமென்­ஷியா நோயா­ளி­கள், பரா­ம­ரிப்­பா­ளர்­கள், நிபு­ணர்­கள், பொது­மக்­கள் போன்­றோ­ருக்கு இணை­யத்­த­ளத்­தின் வளங்­கள் துணை­பு­ரி­யும் என்று கூறப்­பட்­டது.

உறுப்­பி­னர் திட்­டத்­திற்­கென வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள கைபே­சிச் செயலி, டிமென்­ஷியா நோயா­ளி­கள் பாது­காப்­பாக வீடு திரும்ப உத­வும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

உதவி பெறும் சூழலை அமைத்­துத் தரும் திட்­டம், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள் கொண்ட ஒரு புளோக்­கில் அமைந்­தி­ருக்­கும். டிமென்­ஷியா பரா­ம­ரிப்பு வச­தி­களும் ஆத­ர­வும் உள்­ள­டங்­கிய அந்த புளோக்­கின் வீடு­களில் டிமென்­ஷியா நோயா­ளி­கள் தொடர்ந்து வசிக்க முடி­யும்.

ஞாபக மறதி, மொழி மற்­றும் சிக்­க­லைத் தீர்க்­கும் ஆற்­றலை இழத்­தல் போன்ற பல­த­ரப்­பட்ட அறி­கு­றி­களை 'டிமென்­ஷியா' என்ற சொல் பொது­வா­கக் குறிக்­கிறது. 60 வய­துக்கு மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர் பத்­தில் ஒரு­வ­ருக்கு, அதா­வது கிட்­டத்­தட்ட 82,000 பேருக்கு டிமென்­ஷியா இருப்­ப­தாக 2018ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் மூப்­ப­டை­யும் சமூ­கம் அதி­க­ரித்து வரும் நிலை­யில், டிமென்­ஷியா நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கும் என்­றார் திரு­வாட்டி ஹலிமா.

உள்­ளூர்­வா­சி­களில் 65 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­கள் 15.2 விழுக்­காட்­டி­னர் ஆவர் என்று சிங்­கப்­பூ­ரின் 2020 மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு தெரி­வித்­துள்­ளது. 10 ஆண்­டு­களுக்கு முன் முதி­யோ­ரின் எண்­ணிக்கை 9 விழுக்­கா­டாக இருந்­தது.