மின்சார வாகனங்களுக்காக ஓராண்டுக்குள் 600 மின்னூட்ட மையங்கள் ஏற்படுத்தப்படும்

மின்சார வாகனங்களுக்காக ஓராண்டுக்குள் 600 மின்னூட்ட மையங்கள் ஏற்படுத்தப்படும்

2 mins read
f1800451-9af3-4ea3-a303-b6e9e7e2729c
-

மின்­சார வாக­னங்­க­ளுக்­காக சிங்­கப்­பூ­ரில் அடுத்த 12 மாதங்­களில் 600க்கும் மேற்­பட்ட மின்­னூட்ட வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­பட உள்­ளன.

வீவக பேட்­டை­கள், தொழிற்­பேட்­டை­கள் மற்­றும் மத்­திய வர்த்­தக வட்­டா­ரம் போன்­ற­வற்­றில் உள்ள 200க்கும் மேற்­பட்ட பொது கார்­

நி­றுத்­தப் பகு­தி­களில் இவை நிறு­வப்­படும். முதற்­கட்ட மின்­னூட்ட நிலை­யங்­கள் இவ்­வாண்­டின் இறு­திக்­குள் அமைக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தொடர்ந்து, அடுத்த ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டுக்­குள் மத்­திய வட்­டா­ரத்­தில் 210 மின்­னூட்ட மையங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கும். அதே­போல தீவின் வடக்­குப் பகு­தி­யில் 50, வட­கி­ழக்­குப் பகு­தி­யில் 100, கிழக்கு வட்­டா­ரத்­தில் 120 மற்­றும் மேற்கு வட்­டா­ரத்­தில் 140 என தொடர்ந்து 620 மின்­னூட்ட மையங்­களை ஓராண்டு காலத்­திற்­குள் அமைக்­கத் திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­ய­மும் நிலப் போக்கு ­வ­ரத்து ஆணை­ய­மும் நேற்று இத­னைக் கூட்­டா­கத் தெரி­வித்­தன.

கிழக்கு, மேற்கு மற்­றும் மத்­திய வட்­டா­ரங்­களில் மின் வாக­னங்­க­ளுக்­கான மின்­னூட்ட மையங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஏலக்­குத்­தகை கம்­ஃபர்ட்­டெல்­குரோ இன்­ஜி­னி­ய­ரிங் மற்­றும் இன்ஜீ சௌத் ஈஸ்ட் ஏஷியா ஆகிய நிறு­வ­னங்­க­ளி­டம் வழங்­கப்­பட்டு உள்­ளது.

அதே­போல வடக்கு மற்று வட­கி­ழக்கு வட்­டா­ரங்­க­ளுக்­கான ஏலக்­குத்­தகை வேறு சில நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு உள்­ளன.

2030ஆம் ஆண்­டுக்­குள் பொது கார்ப் பேட்­டை­களில் 40,000 மின்­னூட்ட மையங்­களை ஏற்­ப­டுத்­து­வது தேசிய இலக்கு. அதன் முதல் படி­யாக, 600 மையங்­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

நிலப் போக்­கு­வ­ரத்­துத் தொழில்­துறை தினத்­தில் பங்­கேற்று உரை நிகழ்த்­திய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன், மின்­னூட்­டும் கட்­ட­மைப்பு என்­பது மின்­சார வாக­னங்­களை ஊக்­கப்­ப­டுத்­தும் சிங்­கப்­பூர் உத்­தி­யின் முக்­கிய அம்­சம் என்­றார்.