ஆசியாவில் மின்னிலக்க நிதிச் சேவைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான திறன்களை மேம்படுத்த ஆய்வுக் கழகம் ஒன்று முக்கிய பங்களிக்கும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
மின்னிலக்க நிதிச் சேவை தொடர்பான திறன்கள், அனுவம் கொண்டோருக்கான தேவை அதிகரித்திருப்பதை அவர் சுட்டினார். சவால்களை எதிர்கொள்ள ஃபின்டெக் துறைக்கு ஆய்வுக் கழகம் உதவும் என்றார் அவர்.
நேற்று சிங்கப்பூர் தேசிய பல்
கலைக்கழகத்தின் கென்ட் ரிட்ஜ் வளாகத்தில் ஆசியான் மின்னிலக்க நிதிக் கழகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அதில் துணைப் பிரதமர் ஹெங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நாணய ஆணையம், தேசிய ஆய்வு அறநிறுவனம் ஆகியவை இணைந்து ஆய்வுக் கழகத்தை அமைத்துள்ளன. முதுகலை, முனைவர் பட்டக் கல்வித் திட்டங்களை வழங்க 20 முன்னணி வங்கிகள், ஃபின்டெக் மற்றும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலியவற்றுடன் கழகம் இணைந்து செயல்படுவதாக திரு ஹெங் கூறினார். மற்ற துறைகளில் பட்டம் பெற்றுள்ளவர்கள், கழகம் வழங்கும் இந்த முதுகலை, முனைவர் பட்டக் கல்வித் திட்டங்களில் சேர்ந்து பயிலலாம் என்று திரு ஹெங் தெரிவித்தார்.
கழகத்தின் பிரதான கல்வித் திட்டமான மின்னிலக்க நிதித் தொழில்நுட்ப முதுகலைப் பட்டக் கல்வி திட்டத்தில் 52 பேர் இணைந்துள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தலைவர் டான் எங் சாய் தெரிவித்தார். மின்னிலக்க நிதித் தொழில்நுட்ப முனைவர் பட்டக் கல்வியில் ஐவர் சேர்ந்துள்ளனர்.
வலுவான தொழில்நுட்பத்
திறனுடனும் சுயமாக ஆய்வு செய்யும் திறனுடனும் செயல்படக்
கூடிய உயர்தர பட்டதாரிகளை உருவாக்குவதே திட்டத்தின் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டது.

