மதுபோதையில் போலிஸ் அதிகாரி ஒருவரின் தலையில் முட்டியது, மற்றோர் அதிகாரியை இனரீதியாக இழிவுபடுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 33 வயது சிங்கப்பூரரான முகமது ஃபைசால் சீனி சையத்துக்கு 17 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், முகமது ஃபைசால் மதுபோதையில் தனது தந்தையைக் கத்தியால் மிரட்டியிருக்கிறார். அதோடு, தன்னிடமிருந்து பிரிந்து வேறு அறையில் வாழ்ந்துகொண்டிருந்த மனைவியிடமிருந்து தங்கக் கழுத்துச் சங்கிலியையும் பணத்தையும் அவர் திருடியிருக்கிறார்.

