சிங்கப்பூரில் கேடிவி மனமகிழ் மன்றங்கள், விடுதிகளில் கொவிட்-19 தொற்று ஏற்பட்டதை அடுத்து அதைத் தடுக்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் 400க்கும் மேற்பட்ட இரவுநேர விடுதிகள் இரண்டு வார காலம் மூடப்பட்டன.
அவற்றில் தொழிலை மாற்றிக்கொண்ட ஏறத்தாழ 20 இரவுநேர விடுதிகள் மட்டுமே மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து கிளப்ஸ் ஸ்திரீட்டில் இருக்கும் 'பார் என்கேடி' என்ற இரவுநேர மதுபானக் கூடம் செப்டம்பர் 7ஆம் தேதி செயல்படத் தொடங்கியது.
என்றாலும் அது கடுமையான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டி இருந்தது. $2,000 செலவில் பல மாற்றங்களை அந்த மதுபானக்கூடம் செய்தது.
ஜூலை மாதம் தடை அகன்றதை அடுத்து பரிசோதனைகளில் வெற்றி பெற்று எழுத்து மூலமான சான்றிதழ்களைப் பெற்றால்தான் இரவுநேர விடுதிகள் தொழிலை நடத்த முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஊழியர்களுக்கு ஏழு நாளும் கொவிட்-19 பரிசோதனை நடத்த வேண்டும். பிரத்தியேக படச்சாதன வசதி எல்லாவற்றையும் உள்ளடக்கும் வகையில் இருக்க வேண்டும் போன்றவை புதிய பாதுகாப்பு நட வடிக்கைகளில் உள்ளடங்கும்.
வெளியில் இருந்து மக்கள் பார்க்கும்படி சன்னல் கண்ணாடிகள் இருக்கவேண்டும். தனி அறைகள் அனைத்தும் பூட்டப்பட வேண்டும். கரவோக்கே இயந்திரங்கள் போன்றவை வருகையாளர்களின் கண்ணில் படும்படி இருக்கக் கூடாது என்பதெல்லாம் நிபந்தனைகளில் உள்ளடங்கும்.
இதனிடையே, ஒவ்வொரு விடுதிக்கும் தகுந்தாற்போல் ஒவ்வொரு விண்ணப்பத்தின் ஒட்டுமொத்த பரிசீலிப்பு நேரமும் வேறுபட்டு இருக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சும் நீடித்த, நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சும் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
இடத்தை வந்து பரிசோதிக்குமாறு கேட்டு பல இரவுநேர விடுதிகளும் அதிகாரிகளிடம் விண்ணப்பித்து இருப்பதாக சிங்கப்பூர் இரவுநேர கேளிக்கை தொழில்துறையினர் சங்கம் தன்னிடம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
இரவுநேர கேளிக்கை துறை உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கும் செயல்பாட்மிடைத் தொடங்க கவும் எச்சரிக்கையுடன் பொதுமக்களின் சுகாதார நலனுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் படிப்படியாக தொடர்ந்து அனுமதி வழங்கப்படும் என்று இரண்டு அமைச்சுகளும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.

