தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலாய், முஸ்லிம் சமூகத்தின் அக்கறைக்குரிய விவகாரங்கள்

2 mins read
c1729ee6-06a3-496b-802f-f9b320a560bc
-

பிரதமர் லீயின் தேசிய தினப் பேரணி உரையை ஒட்டிய கலந்துரையாடல்

வேலை­யி­டத்­தில் நியா­ய­மான வழி­காட்­டு­தல்­கள் விரை­வில் சட்­ட­மாக்­கப்­படும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரை­யில் அறி­வித்­ததை அடுத்து, பல­ரும் ஆர்­வம் காட்­டும் ஒரு விவ­கா­ர­மாக வேலை­யி­டப் பாகு­பாடு உரு­வெ­டுத்­துள்­ளது.

இந்த விவ­கா­ரத்­து­டன் வேறு பல அம்­சங்­கள் பற்­றி­யும் நேற்று முன்­தி­னம் இரவு நடை­பெற்ற தேசிய தினப் பேரணி உரை தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லின்­போது பேசப்­பட்­டது. நிகழ்­வில் அடித்­தள அமைப்­பு­க­ளின் தொண்­டூ­ழி­யர்­களும் மலாய், முஸ்­லிம் சமூ­கத் தலை­வர்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

கிட்­டத்­தட்ட 200 பேர் பங்­கேற்ற இந்­தக் கலந்­து­ரை­யா­டல், மக்­கள் கழக மலாய் நற்­ப­ணிச் செயற்­குழுக்­கள் ஒருங்­கி­ணைப்பு மன்­றத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெற்­றது. கலந்­து­ரை­யா­டலை வழி­ந­டத்­தி­யோரில் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மா­னும் இடம்­பெற்­றி­ருந்­தார்.

வேலை­யி­டத்­தில் பாகு­பாடு காட்­டப்­ப­டு­தல், அந்த விவ­காரத்தை 'டபெப்' எனப்­படும் நியா­ய­மான வேலை நடை­மு­றை­களுக்­கான முத்­த­ரப்­புக் கூட்­டணி எவ்­வாறு கையா­ளும் போன்ற கேள்­வி­களை கலந்­து­ரை­யா­ட­லின்­போது எழுப்­பி­னர் சிலர்.

'ஸூம்' வழி கலந்­து­ரை­யா­ட­லில் இணைந்த ஒரு­வர், வேலைக்­கான விளம்­ப­ரங்­களில் மொழி தொடர்­பான தகு­தி­நிலை குறித்­துத் தெளி­வான வழி­காட்­டு­தல்­கள் வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரின் மூப்­ப­டை­யும் சமூ­கம் சந்­திக்­கக்­கூ­டிய அம்­சங்­கள் குறித்­தும் கலந்­து­ரை­யா­ட­லில் பேசப்­பட்­டது. தம்­மி­டம் பெருத்த அனு­ப­வம் இருந்­தும் தம்­மை­விட இளை­ய­வர்­க­ளுக்­குக் கூடு­தல் ஊதி­யம் கிடைப்­ப­தா­கக் கூறித் தமது ஆதங்­கத்­தைப் பகிர்ந்­து­கொண்­டார் மற்­றொ­ரு­வர்.

இத்­த­கைய வேலை­வாய்ப்பு தொடர்­பான விவ­கா­ரங்­களை 'டஃபெப்' எவ்­வாறு கையா­ளும் என்­பது குறித்து பீஷான்-தோ பாயோ குழுத்­தொ­குதி எம்.பி. சக்தி­யாண்டி சுப்­பாட் கூடு­தல் விவ­ரங்­களை அளித்­தார்.

நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட உள்ள இன நல்­லி­ணக்­கத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்­ளு­த­லுக்­கான சட்­டம் தொடர்­பான கேள்­வி­களும் எழுப்­பப்­பட்­டன. வெவ்­வேறு இனக் குழுக்­க­ளி­டையே நிதா­னத்­தை­யும் சகிப்­புத்­தன்­மை­யை­யும் ஊக்­கு­விக்க இச்­சட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்று பிர­த­மர் லீ முன்­னர் கூறி­யி­ருந்­தார்.

கடந்த சில மாதங்­களில் இன­ரீ­தி­யாக நடந்­துள்ள சம்­ப­வங்­கள் குறித்­தும் கலந்­து­ரை­யா­ட­லின்­போது பேசப்­பட்­டது.

வாடகை வீடு­களில் இருக்­கும் இளம் மலாய் குடும்­பங்­க­ளுக்கு எவ்­வாறு உத­வ­லாம் என்­பது குறித்­தும் கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­வர்­கள் கேட்­ட­னர்.

தாம் முன்­னர் குறிப்­பிட்­டது போல் 'DIAN@M3' திட்­டம் மூலம் இந்­தக் குடும்­பங்­க­ளுக்கு உதவி கிடைக்­கும் என்­றார் டாக்­டர் மாலிக்கி. சொந்த வீடு­களை வாங்கு­வ­தற்­கான ஆத­ரவை, வாடகை வீட்­டில் இருக்­கும் குடும்­பங்­க­ளுக்கு இத்­திட்­டம் வழங்­கும் என்று வலி­யு­றுத்­தி­னார் அவர்.

"நாம் ஒரு சமூ­க­மாக சந்­திக்­கும் சவால்­க­ளைப் பற்­றிய விழிப்­பு­ணர்வு இங்­குள்ள பங்­கேற்­பாளர்­களி­டையே இருப்­பதை உண­ரும்­போது எங்­களை அது நெகிழ வைக்­கிறது," என்­றார் டாக்­டர் மாலிக்கி.

அத்­து­டன் மலாய், முஸ்­லிம் அமைப்­பு­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தி­லும் ஆத­ரவு தேவைப்­படும் சமூ­கத்­தி­னரை அடை­வ­தற்கு அர­சாங்­கத்­து­டன் செயல்­ப­டு­வ­தி­லும் பங்­கேற்­பா­ளர்­கள் ஆர்­வம் காட்­டு­வ­தை­யும் அவர் பாராட்­டி­னார்.

இத­னால் மலாய், முஸ்­லிம் சமூ­கத்­தி­னர் ஒன்­றாக முன்­னேறி மேம்­பட்ட நிலையை அடைய முடி­யும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.