16 அடி உயரத்தில் காட்சியளிக்கும் 'வெட்டிவேர்' விநாயகர்

2 mins read
8d936717-994b-4282-b722-b928d7bc385b
கேலாங் ஈஸ்ட் அவென்­யூ­ 2ல் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் வெட்டிவே­ரால் உருவாக்கப்பட்ட 16 அடி உயர, 16 அடி அகல விநா­ய­க­ரின் திரு­வு­ரு­வம்­. படம்: இந்து அறக்கட்டளை வாரியம் -

கி. ஜனார்த்­த­னன்

வெட்­டி­வே­ரால் உரு­வாக்­கப்­பட்ட 16 அடி உயர, 16 அடி அகல விநாய­க­ரின் திரு­வு­ரு­வம், விநா­ய­கர் சதுர்த்­தியை முன்­னிட்டு கேலாங் ஈஸ்ட் அவென்­யூ 2ல் உள்ள ஸ்ரீ சிவன் கோயி­லில் வைக்­கப்­பட்டுள்­ளது. சிங்­கப்­பூ­ரில் இது­வரை உரு­வாக்­கப்­பட்ட ஆக உய­ர­மான விநா­ய­கர் திரு­வு­ரு­வ­மாக இது கரு­தப்­ப­டு­கிறது.

தற்­போது நில­வி­வ­ரும் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் ஓய­வேண்­டும் என்ற பிரார்த்­த­னையை முன்­வைத்து பாரம்­ப­ரிய மூலி­கை­யான வெட்­டி­வேர் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக ஆல­யம் கூறி­யது.

"பதி­னாறு வகை­யான வளங்­களைக் குறிக்­கும் வகை­யில் பதி­னாறு அடி உரு­வம் உரு­வாக்­கப்­பட்­டது," என்று உரு­வத்தை வடி­வமைத்து அதன் உரு­வாக்­கத்தை வழி­ந­டத்­திய ஆல­யத்­தின் அலங்­கார அர்ச்­ச­கர் வாகே­சன் குருக்­கள் தெரி­வித்­தார். இந்­தத் திரு­வு­ரு­வத்­தைச் செய்ய இந்­தி­யா­வி­லி­ருந்து 150 கிலோ­கி­ராம் எடை­யுள்ள வெட்­டி­வேர் தரு­விக்­கப்­பட்­ட­தாக ஆல­யத்­தின் செய­லா­ளர் க. கலை­ய­ர­சன் தெரி­வித்­தார்.

விநா­ய­கர் திரு­வு­ரு­வம் இம்­மாதம் 1ஆம் தேதி பொது­மக்­க­ளின் பார்­வைக்­குத் திறந்து வைக்­கப்­பட்­டது. இது­போன்ற ஒரு திரு­வு­ரு­வத்­தைக் கடந்­தாண்டு கரும்­பைப் பயன்­ப­டுத்தி ஆல­யம் செய்­தி­ருந்­தது.

"இந்­துக்­கள் மட்­டு­மின்றி, அரு­கி­லுள்ள பௌத்த ஆல­யத்­துக்­குச் செல்­லும் பிற இன, சம­யத்­த­வ­ரும் இந்த விநா­ய­க­ரைக் காண இங்கு வரு­கின்­ற­னர்," என்­றார் திரு கலை­ய­ர­சன்.

இன்று விநா­ய­கர் சதுர்த்­தி­யைக் கொண்­டாட பக்­தர்­கள் நேரில் ஆல­யத்­திற்கு வர­லாம் அல்­லது இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் ஃபேஸ்புக் பக்­கத்­தின் நேரலை மூலம் இணை­ய­லாம் என்று திரு கலை குறிப்­பிட்­டார்.

பூக்­கடை வியா­பா­ரம் மந்­தம்

இதற்­கி­டையே, லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தி­லுள்ள பூக்­க­டை­களும் மளி­கைக் கடை­களும், விநா­ய­கர் சதுர்த்­திக்­காக பல்­வேறு பொருட்­களை அதி­கம் தரு­வித்து விற்­கின்­றன. வாடிக்­கை­யா­ளர்­கள் வரு­கின்­றனர் என்­றா­லும் வியா­பா­ரம் இவ்­வாண்டு திருப்­தி­க­ர­மாக இல்லை என்­பது கடைக்­கா­ரர்­க­ளின் பொது­வான கருத்து.

எதிர்­பார்த்த அள­வுக்கு வர்த்­த­கம் நடை­பெ­ற­வில்லை என்ற கார்த்­திகா டிரே­டிங் உரி­மை­யா­ளர் எ. ஜெயக்­கு­மார், பொருட்­க­ளைத் தரு­விப்­ப­தற்­கான செலவு மிக அதி­கம் என்­றார்.

"தரு­விக்­கும் பொருட்­க­ளின் விலை பத்து மடங்கு அதி­க­ரித்­துள்­ளது. முன்­பை­விட வாடிக்­கை­யா­ளர் கூட்­ட­மும் வெகு­வா­கக் குறைந்­தி­ருக்­கிறது," என்­றார்.

வர்த்­தக மந்­தத்­திற்கு மாறி­வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவை­யும் ஒரு கார­ணம் என்று தனாஸ் பூக்­கடை­யின் விற்­பனை நாரா­ய­ண­சாமி, 70, தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே இந்­தப் பண்­டி­கை­யைக் கொண்­டா­டும் பாரம்­ப­ரி­யப் போக்கு கடந்த பத்து ஆண்­டு­க­ளா­கவே குறைந்து வரு­கிறது. அத்­து­டன், விற்­கப்­படும் பொருட்­கள் தங்­க­ளைக் கவ­ரும் வகை­யில் இருக்­க­வேண்­டும் என்ற எதிர்­பார்ப்­பில் பலர் பொருட்­களை எளி­தில் வாங்­கு­வ­தில்லை," என்று தெரி­வித்­தார்.

வாடிக்­கை­யா­ளர்­கள் தரப்­பில் மித­மான திருப்தி தென்­பட்­டது. கடந்­தாண்­டைக் காட்­டி­லும் இவ்­வாண்டு விற்­கப்­படும் பூ வகை­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக 57 வயது திரு­வாட்டி லலிதா கூறி­னார், பூக்­களின் விலை 50 காசு முதல் ஒரு வெள்ளி வரை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக 66 வயது திரு­வாட்டி பானு­மதி கூறி­னர். பூவின் விலை அதி­க­ரித்­தி­ருந்­தா­லும் நினைத்த பொருட்­களை வாங்க முடிந்­ததை எண்ணி மகிழ்­வ­தா­கத் கூறி­னார் 42 வயது திரு­வாட்டி காஞ்­சனா.