சிங்கப்பூர் இலக்கியத்தில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு பற்றிய நூல்

சிங்கப்பூர் இலக்கியத்தில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு பற்றிய நூல்

2 mins read
71f02f08-d952-4684-90ea-cfb511a5d9b3
-

சிங்­கப்­பூ­ரில் 1875ஆம் ஆண்டு வெளி­வந்த சிங்கை வர்த்­த­மானி என்ற பத்­தி­ரி­கை தென்­கி­ழக்­கா­சி­யா­வி­ல் வெளி­வந்த முதல் தமிழ் இதழ். ஆசி­ரி­ய­ரான மகு­தூம் சாயுபு இது தவிர தங்கை நேசன், ஞான­சூ­ரியன், சிங்கை நேசன் போன்ற பத்­தி­ரி­கை­க­ளை­யும் வெளி­யிட்­டுள்­ளார். அதற்கு முன், 1872ல் நாகூர் முகம்­மது அப்துல் காதி­றுப் புல­வர் எழுதிய முனா­ஜாத்­துத் திரட்டு என்ற கவிதை நூல் சிங்­கப்­பூ­ரில் அச்­சி­டப்­பட்ட முதல் தமிழ் நூல். அந்நூல் தேசிய நூலக வாரி­யத்­தி­டம் உள்­ளது.

இப்படி, சிங்­கப்­பூ­ரில் தமிழ் முஸ்­லிம்­கள் இலக்­கி­யத்­திற்கு 19ஆம் நூற்­றாண்டு முதல் இன்று வரை ஆற்­றி­வ­ரும் பங்­க­ளிப்­பை, என்­றும் அனைத்­து­லக மெய்­நி­கர் கருத்­த­ரங்­கில் தமி­ழ­வேள் நற்­பணி மன்ற செய­லா­ள­ரும் செம்­மொழி இத­ழின் ஆசி­ரி­ய­ரு­மான திரு எம்.இலி­யாஸ் எடுத்துரைத்தார்.

தமிழ்­நாட்­டின் இஸ்­லா­மிய இலக்­கிய கழ­கம் நடத்­தி­வ­ரும் கருத்­த­ரங்­கத் தொட­ரில் சிங்­கப்­பூர் இலக்­கி­யத்­திற்கு தமிழ் முஸ்­லிம்­க­ளின் பங்கு குறித்த அங்­கம் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி 'ஸூம்' மெய்­நி­கர் தளம் மூலம் நடந்­தது.

அதில் படைக்­கப்­பட்ட ஆய்­வுக்­கட்­டுரையை விரி­வாக்­கம் செய்து நூலாக வெளி­யிட திட்­டம் உள்­ள­தா­கக் கூறி­னார் திரு இலி­யாஸ்.

"இந்த ஆய்வு பல சுவா­ர­சி­ய­மான தக­வல்­க­ளைக் கொண்­டுள்­ளது. பதி­வு­ செய்­யப்­ப­ட­ வேண்­டிய இத்தகவல்கள் நூலாக வெளி­வ­ர­வி­ருப்­பது மிகச் சிறப்பு," என்­றார் முனை­வர் சுப. திண்­ணப்­பன்.

சிங்­கப்­பூர், மலே­சியா, இந்­தியா, இலங்கை, துபாய், சவூதி அரே­பியா போன்ற நாடு­க­ளைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 100 பேர் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரின் உய­ரிய கலா­சார பதக்­கத்­தைத் தமிழ் முஸ்­லிம்­கள் சிங்கை முகி­லன், ஜே.எம்.சாலி, க.து.மு.இக்­பால் ஆகி­யோர் பெற்­றுள்­ள­தைச் சுட்­டிய திரு இலி­யாஸ், ஆங்­கி­லம், மலாய், அரபு, பர்­மிய இலக்­கி­யத்­திற்­கும் தமிழ் முஸ்­லிம்­கள் பங்­க­ளித்­த­னர் என்­றார்.