வனவிலங்குக் காப்பகத்தின் (வைல்ட்லைஃப் ரிசர்வ்ஸ்) முன்னாள் ஊழியர்கள் உட்பட 12 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவ்விருவரில் ஒருவரான 54 வயது பேரி சோங் பெங் வீ, 12 ஆண்டுகளில் 2.4 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகைை லஞ்சமாகப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
டேனியல் சோங் என்றும் அழைக்கப்படும் அந்த ஆடவர் மீது 107 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
லஞ்சப் பணத்தை வைத்து 'ரோலெக்ஸ்' சொகுசு கைக்கடிகாரத்தை அவர் வாங்கியதாகவும் சந்தேதிக்கப்படுகிறது.
அதன் தொடர்பிலும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சோங் புரிந்ததாகச் சொல்லப்படும் குற்றச் செயல்களுடன் தொடர்பு இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 11 பேர் மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்களில் ஒருவர், வனவிலங்குக் காப்பகத்தில் முன்பு வேலை செய்த 44 வயது சின் ஃபொங் யி.
அவரும் குற்றம் சுமத்தப்பட்ட இதர 10 பேரும், தங்களின் நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியாக உதவிக்கொள்ள சோங்கிற்கு லஞ்சம் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

