சாங்கி விமான நிலையம் அல்லது தனா மேரா படகு முனையம் வழியாக இங்கு வரும் வெளிநாடு வாழ் சிங்கப்பூரர்கள், கட்டாய மாக வீட்டில் தங்கும் உத்தரவை முழுமையாக நிறைவேற்றாமல் முதல் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு அடுத்த விமானத்திலோ படகிலோ தங்கும் நாட்டிற்குத் திரும்பலாம்.
இல்லாவிடில், சிங்கப்பூர் வந்தவுடன் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு, அரசாங்கம் நிர்ணயிக்கும் இடத்தில் கட்டாய மாக வீட்டில் தங்கும் உத்தரவை முழுமையாக நிறைவேற்றி, தேவைப்படும் இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். அதன் பின்னர் அவர்கள் தங்கும் நாட்டிற்குத் திரும்பலாம். வெளியுறவு அமைச்சும் சுகாதார அமைச்சும் இத்தகவலை இணைந்து வெளியிட்டன. இதற்கிடையே, நேற்று முன்தின நிலவரப்படி 568 பேருக்குப் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. கிருமித்தொற்றுக்கு ஆளான ஒரு முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட 80 வயது ஆடவர் உயிரிழந்தார்.

