2,200 பேரை வெளியேற்றிய சிங்கப்பூர் ஆகாயப் படை

2,200 பேரை வெளியேற்றிய சிங்கப்பூர் ஆகாயப் படை

1 mins read
b9b14da1-07c1-454b-8093-0cade54e0f4f
ஆப்கானிஸ்தானிலிருந்து 2,200 பேரை வெளியேற்ற உதவியது சிங்கப்பூர் ஆகாயப் படை. படம்: தற்காப்பு அமைச்சு -

ஆப்கானிஸ்தானிலிருந்து 2,200 பேரை வெளியேற்றும் பணியை சிங்கப்பூர் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

சென்ற மாதம் 26ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூர் ஆகா­யப் படை­யின் எ330 எம்­ஆர்­டிடி விமா­னம் இங்­கி­ருந்து கிளம்­பி­யது. வெளி­யேற்­றப்­படும் ஆப்­கா­னிஸ்­தான் மக்­களை விமா­னம் கத்­தா­ரி­லி­ருந்து ஜெர்­ம­னிக்கு அழைத்­துச் சென்­றது. இரு நாடு­க­ளுக்­கும் இடையே விமா­னம் பத்து முறை பய­ணம் செய்­தது.

பணி­யில் ஈடு­பட்ட வீரர்­கள் சில­ருக்கு இத்­த­கைய மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது இதுவே முதல்­முறை. வீரர்­கள் இந்­தப் பொறுப்பை பெரு­மை­யு­டன் நிறை­வேற்­றி­னர்.

ஆப்­கா­னிஸ்­தான் மக்­களை வெளி­யேற்­றும் பணியை நிறை­வேற்­றிய வீரர்­க­ளுக்­குத் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் ஃபேஸ்புக்­கில் நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.