தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடலோர மரங்களுக்காக உபின் தீவில் புதிய தோட்டம்

2 mins read
4e16d564-c3aa-44de-8b70-912600f1f671
உபின் தீவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தோட்டத்தை நேரில் சென்று பார்த்தனர் அமைச்சர்கள் டெஸ்மண்ட் லீ, கிரேஸ் ஃபூ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உபின் தீவின் சிறப்பிற்கு மெருகூட்ட அங்கு புதிய தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஹெக்­டர் பரப்­ப­ள­வைக் கொண்ட இத்­தோட்­டத்­தில் பொது­வாக நீர்ப்­ப­கு­தி­களில் வள­ரும் மரங்­கள் வளர்க்­கப்­படும்.

இதன் மூலம் உபின் தீவின் கடற்­க­ரைப் பகு­தியை மேம்­ப­டுத்­து­வது இலக்கு.

தோட்­டத்­தில் இவ்­வாண்­டி­று­திக்­குள் சுமார் 500 மரங்­கள் வளர்க்­கப்­படும். அவை தீவில் இயற்கையாக வளரும் 70 வகை­க­ளைச் சேர்ந்­த­வை­யாக இருக்­கும்.

பிறகு மரங்கள் தீவின் கடற்கரைப் பகுதிகளுக்கு இடம் மாற்றப்படும்.

நகர மேம்பாட்டுப் பணிகளால் தீவு சற்று இழந்திருக்கும் இயற்கை அழகை மீண்டும் சேர்ப்பது இதன் இலக்கு.

சிங்­கப்­பூர் தீவில் மேற்­கொள்­ளப்­படும் இயற்கை மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளுக்­கும் அம்­ம­ரங்­கள் பயன்­ப­டுத்­தப்படும். மரங்­கள் நடும் பணி­யைத் தொடங்­கி­வைக்க தோட்­டத்­தில் இம்­மா­தம் 50 கடற்­கரை மரங்­கள் நடப்­படும்.

உபின் தீவில் உள்ள 'உபின் லிவிங் லேப்' ஆய்வுக் கூடத்தின்கீழ் தோட்டம் அமைகிறது.

இயற்கை ஆய்­வு­கள், சுற்­றுச்­சூழல் கல்வி போன்­ற­வற்­றுக்­காக இந்த ஆய்­வுக்கூடம் பயன்­படுத்தப்­ப­டு­கிறது.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ ஆகி­யோர் அரி­ய­வகை செடி­களை நட்டு தோட்­டத்­தை நேற்று திறந்­து­வைத்­த­னர். மரம் நடு­வது உள்­ளிட்ட இயற்­கைப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­ளின் மூலம் உபின் தீவின் முக்­கிய இயற்­கைப் பகு­தி­க­ளை­யும் கட்­டமைப்­பு­க­ளை­யும் கட்­டிக்­காப்­பது இப்­ப­கு­திக்­குச் சொந்­த­மான அரிய வகை உயி­ரி­னங்­கள் நீண்ட காலம் வாழ உதவு­வதில் முக்­கி­ய பங்கு வகிக்­கிறது எனத் திரு லீ குறிப்­பிட்­டார்.

பரு­வ­நிலை மாற்­றத்­தின் பாதிப்புக்கு எதி­ரா­கப் போரா­ட மீண்டும் வனப் பகு­தியை உரு­வாக்­கு­வது பங்கு கைகொடுக்கக்கூடும் எனத் திரு­வாட்டி ஃபூ கூறி­னார்.