கொவிட்-19: வீட்டில் குணமடையும் திட்டத்தால் பலனடைந்தவர்

கொவிட்-19: வீட்டில் குணமடையும் திட்டத்தால் பலனடைந்தவர்

2 mins read
50621867-4807-40f8-94be-15bce33b2c2f
திரு புவனேஸ்வரம் ரகுராம். படம்: சுகாதார அமைச்சு/ஃபேஸ்புக் -

கொவிட்-19 தொற்று ஏற்பட்ட 51 வயது திரு புவனேஸ்வரம் ரகுராம், வீட்டில் இருந்தபடி குணமடையும் திட்டம் தனக்குத் தேவையான நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

முத­லில் திட்­டத்தை மேற்­கொள்ள அவ­ரது வீடு உகந்­ததா என்­பதை சுகா­தார அமைச்சு அவரு­டன் உறு­திப்­ப­டுத்­திக்­கொண்­டது. திட்­டத்­தின்­கீழ் அவர் ஒரே அறை­யில் இருக்­க­வேண்­டும், குடும்­பத்­தார் வீட்­டின் இதர பகுதி­களில் இருக்­க­வேண்­டும்.

அவர் தொடர்­பு­கொள்ள ஓர் உத­வி­யாளரை அமைச்சு நிய­மித்­தது. மெய்­நி­கர் வாயி­லாக எவ்­வாறு மருத்­து­வச் சேவை­களை நாடு­வது, திடீ­ரென உடல்­ந­லம் குன்­றி­னால் என்ன செய்­வது போன்ற அம்­சங்­கள் குறித்து திரு ரகு­ரா­மிற்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது.

அதி­கா­ரி­கள் தின­மும் தன்­னுடன் தொடர்­பில் இருந்­த­தா­க அவர் கூறி­னார்.

முகக் கவ­சங்­கள், உட­ல் வெப்­ப­நி­லை­யைக் காட்­டும் வெப்பமானி, கை சுத்­தி­கரிப்­பான், குப்­பைப் பைகள் உள்­ளிட்ட பொருட்­கள் இருந்த பரா­மரிப்புப் பொட்­ட­லம் தன்­னி­டம் வழங்­கப்­பட்­ட­தாக அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரி­வித்­தார். அவ­ரைத் தொடா­மல் உணவு வழங்­கு­வது போன்ற செயல்­களில் குடும்­பத்­தார் ஈடு­பட உத­வும் பொருட்­கள் அவை.

ஒரு நாளைக்கு மூன்று முறை திரு ரகு­ராம் தனது உடல் வெப்­ப­நி­லை­யைச் சோதித்­தார்.

மின்­னி­லக்க முறை­கள் வாயி­லா­கத் தக­வல்­களை அனுப்பினார்.

கொவிட்-19 கிருமித்தொற்று நீங்கியது உறு­தி­யா­ன­வு­டன் திரு ரகு­ராம் தன்­னைத் தனி­மைப்­படுத்திக்­கொள்­ளத் தேவை­யில்லை என்று சுகா­தார அமைச்சு அவருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­யது.

குண­ம­டை­யும்­போது தனது குடும்­பத்­தாரை நேரில் பார்க்­க­மு­டி­யா­விட்­டா­லும் அவர்­கள் அரு­கிலே யே இருந்­தது நம்­பிக்கை அளித்­த­தா­கத் திரு ரகு­ராம் குறிப்­பிட்­டார்.

"அவர்களுடன் சேர்ந்து உட்காரவோ உணவவருந்தவோ என்னால் முடியவில்லை, ஆனால் எனது அறையின் கதவுக்கு சில அடி தூரத்தில் அவர்கள் இருந்தது எனக்குத் தெரிந்தது," எனத் திரு ரகுராம் கூறினார்.

உணவை சரியாகக் கொடுப்பது, சிறப்பு மூலிகை பானங்களைத் தருவது போன்ற செயல்களைச் செய்து குடும்பத்தார் தனக்கு மிகவும் ஆதரவாக இருந்ததாக அவர் சொன்னார்.