ஆண்டிறுதி வாக்கில் துவாஸ் துறைமுகத்தில் புதிய வசதிகள்

2 mins read
bb9de823-1603-4c39-b48e-552408a3f1a2
2050க்குள் கரி­யமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் தடுப்பது துவாஸ் துறைமுகத்தின் இலக்கு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முதல் இரண்டு கப்­பல் நிறுத்­தும் இடங்­கள் (பெர்த்­து­கள்) துவாஸ் துறை­மு­கத்­தில் திட்­ட­மிட்­ட­படி இவ்­வாண்­டி­று­தி­யில் திறக்­கப்­படும். இது சிங்­கப்­பூ­ரின் கப்­பல் வர்த்­த­கத்­தின் நிலையை உயர்த்­தும் என்று நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர்.

குடி­நு­ழை­வுத் திட்­டத்­தில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­கள்­படி, சிங்­கப்­பூ­ருக்கு வரும் கப்­பல்­களும் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து புறப்­படும் கப்­பல்­களும் நங்­கூ­ர­மிட நிய­மிக்­கப்­பட்ட இடம் துவாஸ் துறை­மு­கம்.

அடிப்­படை வச­தி­கள், முனைய வாசல்­கள், கட்­ட­டங்­கள், பரா­ம­ரிப்பு தளங்­கள் போன்­ற­வற்­றின் மேம்பாட்டுப்பணி­கள் சீராக நடை­பெற்று வரு­வ­தா­கத் துறை­மு­கத்தை இயக்­கும் 'பிஎஸ்ஏ' ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் கூறி­யது.

மேம்­ப­டுத்­த­ப்பட்ட துறை­மு­கச் சாத­னங்­கள் வந்­த­டைந்­து­விட்­ட­தா­க­வும் அது கூறி­யது. $20 பில்­லி­யன் மதிப்­புள்ள இந்த மாபெ­ரும் துறை­மு­கத்­துக்கு (மெகா போர்ட்), நான்கு கட்­டங்­கள் உள்­ளன.

தானி­யக்­கக் கப்­பல்­துறை மேடை­யும் (வார்ஃப்) போன்ற வச­தி­க­ளு­டன் 2040ல் முழுமை காண­வி­ருக்­கும் மாபெ­ரும் துறை­மு­கம், உல­கி­லேயயே ஆகப் பெரிய தானி­யக்க முனை­ய­மா­கத் திக­ழும்.

கப்­பல்­கள் நிறுத்த ஆழ­மான இடங்­களும் (பெர்த்) பெரிய கப்­பல் கொள்­கலன்­க­ளுக்கு வழி­வ­குக்க நீண்ட இடங்­களும் இடம்­பெ­றும்.

மாபெ­ரும் துறை­மு­கத்­தில் தற்­போ­தைய அள­வை­விட, துவாஸ் துறை­மு­கத்­தால் இரு­ம­டங்கு அளவு சரக்கு­க­ளைக் கையாள முடி­யும்.

முதல் கட்ட மீட்­புப் பணி­கள் திட்­ட­மிட்­டபடி டிசம்­பர் மாதம் முடிவு பெறும் என்று சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யம் தெரி­வித்­தது.

2027க்குள் முடிவு பெற­வி­ருக்­கும் முதல் கட்­டம், 21 பெர்த்­து­க­ளைக் கொண்­டி­ருக்­கும். இது 20 மில்­லி­யன் 'டிஇயு' சரக்­கு­க­ளைக் கையா­ளும்.

உற்­பத்­தித்­தி­ற­னை­யும் சேவைத் தரத்­தை­யும் உயர்த்த தாங்­கள் தொழில்­நுட்­பத்­தி­லும் தானி­யக்­கத்­தி­லும் குறிப்­பி­டத்­தக்க முத­லீடு செய்து வரு­வ­தாக போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் திரு சீ ஹொங் டாட் கூறி­னார்.

இவை, கடல்­துறை, விநி­யோ­கச் சங்­கிலி, உற்­பத்­தித்­துறை, தள­வா­டத்­துறை ஆகி­ய­வற்­றின் வளர்ச்­சிக்கும் பங்­க­ளிக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

புதிய துறை­மு­கம் பசு­மை­யான ஒன்­றா­க­வும் 2050க்குள் கரி­யமில வாயு வெளியேற்றம் முற்­றி­லும் இல்­லா­த­தைக் இலக்­கா­கக் கொண்ட ஒன்­றா­க­வும் இருக்­கும் என்று போக்கு­வ­ரத்து அமைச்­ச­ரும் வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான திரு எஸ் ஈஸ்­வ­ரன் தமது 'ஃபேஸ்புக்' பக்­கத்­தில் பதி­விட்­டார்.

இவ்­வாண்­டி­று­தி­யில் திறக்­கப்­ப­ட­வி­ருக்கும் பெர்த்­து­கள் துறை­மு­கம் கையா­ளக்­கூ­டிய கொள்­க­லன் சரக்கு அள­வை உட­ன­டி­யாக கூட்­டும் என்று தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் துணை பேரா­சி­ரி­யர் திரு ரேமண்ட் ஓங் கூறி­னார்.

சுற்றி அமைந்­துள்ள துறை­முகங்­க­ளுக்­கி­டையே உள்ள போட்டி சிங்­கப்­பூ­ருக்­குச் சாத­க­மா­ன­தாக அமை­யும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

நோய்த்­தொற்­றி­லும் கொள்­க­லன் வர்த்­த­கத்­தில் சிங்­கப்­பூர் தொடர்ந்து சிறப்­பாய் இயங்கி வரு­கிறது என்­றும் துவாஸ் துறை­மு­கத்­துக்கு ஒளி­ம­ய­மான எதிர்­காலம் காத்­தி­ருக்­கிறது என்­றும் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் முனை­வர் யாப் கூறி­னார்.