22 பேர் பாதிப்பு: சிராங்கூனிலுள்ள பிசிஎஃப் பாலர் பள்ளி மையம் மூடல்

22 பேர் பாதிப்பு: சிராங்கூனிலுள்ள பிசிஎஃப் பாலர் பள்ளி மையம் மூடல்

2 mins read
01efcfb4-d52a-4cd3-a216-f9df71df2f9c
பாதிக்கப்பட்ட பாலர் பள்ளி மையம். படம்: சாவ் பாவ் -

கொவிட்-19 தொற்­றுக் குழு­மம் உரு­வா­ன­தைத் தொடர்ந்து சிராங்­கூ­னில் உள்ள பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டாட்ஸ் பாலர் பள்ளி நிலை­யம் மூடப்­பட்டு உள்­ளது. சுத்­தி­க­ரிப்­புப் பணி­கள் முடிந்த பின்­னர் செப்­டம்­பர் 21ஆம் தேதி அது மீண்­டும் திறக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டாட்ஸ் @ பிரே­டல் ஹைட்ஸ் என்­னும் அந்த நிலை­யம் புளோக் 335 சிராங்­கூன் அவென்யூ 3 என்­னும் இடத்­தில் உள்­ளது.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தால் அங்­கீ­ரிக்­கப்­பட்ட சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­னம் அங்கு நேற்று முதல் தீவிர தூய்மை மற்­றும் சுத்­தி­க­ரிப்­புப் பணி­களில் ஈட­பட்டு வரு­கிறது.

மீண்­டும் திறக்­கப்­ப­டு­முன் இந்­தப் பணி­கள் முடிக்­கப்­படும் என்று 'பிசி­எஃப்'பின் பாலர் பள்ளி நிர்­வா­கப் பிரி­வின் மூத்த இயக்­கு­நர் மரினி காமிஸ் கூறி­னார்.

மேலும் நிலை­யத்­தின் அடுத்­த­கட்­டப் பணி­கள் பாதிக்கா வண்­ணம் செப்­டம்­பர் 21ஆம் தேதி முதல் அது மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கும் என்று அவர் நேற்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் கூறி­னார்.

நிலை­யம் மீண்­டும் திறக்­கப்­பட்­டா­லும் உடல்­நிலை பாதிக்­கப்­படும் குழந்­தை­கள் முழு­மை­யா­கக் குண­ம­டை­யும் வரை தங்­க­ளது வீட்­டி­லேயே ஓய்­வெ­டுக்க வேண்­டும் என்று கூறிய திரு­வாட்டி மரினி, பிள்­ளை­களின் சுகா­தா­ரத்­தில் கவ­னம் செலுத்­து­மா­றும் அவர்­க­ளின் உடல்­ந­லன் குன்­றி­னால் உட­ன­டி­யாக மருத்­து­வக் கவ­னிப்பை நாடு­மா­றும் பெற்றோர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார். பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டாட்ஸ் @ பிரே­டல் ஹைட்ஸ் கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தில் ஏற்­கெ­னவே 19 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் சனிக்­கி­ழமை மேலும் மூவ­ருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

ஒரே வகுப்­பில் உள்ள மாண­வர்­க­ளுக்கு இடை­யில் தொற்று பர­வி­ய­தாக அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது.