போலி அவசர அழைப்புகள் குறைந்தன

போலி அவசர அழைப்புகள் குறைந்தன

1 mins read
e6f13f25-5965-42a2-8fe7-f203f99fee6d
-

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படையைச் (எஸ்சிடிஎஃ) சென்றடை­யும் போலி­யான அவ­சர உதவி அழைப்­பு­களும் அவ­சர உதவி தேவைப்­ப­டாத அழைப்­பு­களும் இவ்­வாண்­டின் முற்­ப­கு­தி­யில் கணிச­மான அளவு குறைந்­துள்­ளன.

நோய்த்­தொற்­றின் கார­ண­மாக அதி­க­மா­னோர் வீட்­டி­லேயே இருப்­ப­தும், மக்­க­ளி­டையே அதி­க­ரித்­துள்ள விழிப்­பு­ணர்­வும் இதற்­குக் காரணம். அவ­சர மருத்­துவ சேவை தேவைப்­ப­டா­தோர், அவ­சர மருத்­துவ சேவைக்கு அழைப்­பது 15.4% குறைந்து 4,704லி­ருந்து 3,978ஆக உள்­ளது.

நோயா­ளி­கள் யாரும் இல்­லாத நிலை­யில், போலி­யான அவ­சர மருத்­துவ சேவைக்கு வரும் அழைப்­பு­கள் 16.4% குறைந்து 3,200லிருந்து 2,674ஆக உள்­ளது.

இப்­புள்ளி விவ­ரங்­களை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்புப் படை நேற்று வெளி­யிட்­டது. குறைந்­து­வ­ரும் இம்­மா­தி­ரி­யான அழைப்­பு­கள் அவ­சர உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்­கும் உயி­ருக்­குப் போரா­டு­வோ­ருக்­கும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்பு விரைந்து உதவ வழி­வ­குக்­கிறது.

2019ல் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படையை 17,000 போலி­யான அவ­சர உதவி அழைப்­பு­களும் அவ­ச­ர உதவி தேவைப்­ப­டாத அழைப்­பு­களும் சென்­ற­டைந்­தன.

சென்­றாண்டு ஏப்­ரல் மாதத்­திலு­ருந்து (எஸ்சிடிஎஃ), இடம் மாற்­று­தல் சேவை இல்லாத் திட்­டத்தை அமல்­ப­டுத்­தி­யுள்­ளது. இதில், அவ­சர மருத்­துவ சேவை தேவைப்­ப­டா­தோர், வீட்டின் அருகே உள்ள மருந்­த­கங்­க­ளுக்­குச் செல்­லு­மாறு அல்­லது அவ­சர மருத்­துவ சேவை­கள் தேவைப்­படாத நிலை­யில் 1777 என்ற எண்ணை அழைக்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கப்­படும்.

இது அவ­சர சேவை தேவைப்­ ­படுவோ­ருக்கு எஸ்சிடிஎஃ'யின் வளங்­கள் பயன்­ப­டு­வதை உறு­திப்ப­டுத்­தும்.