செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1d270199-45e5-423c-9a33-df4fe21a00a3
-

சிங்கப்பூர் வான்வெளியில் பரபரப்பு

சிங்­கப்­பூர் ஆகா­யப் படை­யைச் சேர்ந்த எஃப்-16 போர் விமா­னங்­கள் நேற்று முன்தினம் கிளம்பிய ஆகா­ய­வெளி அச்­சு­றுத்­த­லைச் சமா­ளிக்­கும் பணியில் வேகமாக ஈடுபட்டன. "நமது பாது­காப்பு விட்­டுத்தரப்படவில்லை என்­பதை உறுதி செய்த பின்­னர் நமது விமா­னங்­கள் நிலை­பெற்­றன," என்று தற்­காப்பு அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார். சனிக்­கி­ழமை காலை 9.20 மணி­ய­ள­வில் அரச மலே­சிய போலிஸ் ஹெலி­காப்­டர் ஒன்று புலாவ் தெக்­கோங் வான்­வெ­ளி­யில் பறந்­த­தாக இணை­யம் வழி­யா­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன. புலாவ் தெக்­கோங்­கில்­தான் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் அடிப்­படை ராணு­வப் பயிற்சி மையம் அமைந்­துள்­ளது. தேசிய சேவை­யா­ளர்­க­ளுக்கு அங்கு பயிற்சி வழங்­கப்­ப­டு­கிறது. அந்­தப் பகு­தி­யின் மீது தனது விமா­னம் பறந்­தது குறித்து அரச மலே­சிய போலிஸ் அறிக்கை ஒன்றை ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டது. செப்­டம்­பர் 11 அன்று சிங்­கப்­பூர் ஆகா­ய­வெ­ளி­யில் எல்­லைக் கட்­டுப்­பாட்டை மீறி எங்­கள் விமா­னம் பறந்­த­தாக சமூக ஊட­கங்­களில் பர­வும் தக­வலை அறிந்­துள்­ளோம்," என்று குறிப்­பிட்­டது அந்­தப் பதிவு. இருந்­த­போ­தி­லும் சிங்­கப்­பூர் ஆகா­ய­ வெ­ளி­யில் மலே­சிய ஹெலி­காப்­டர் நுழைந்­தது தொடர்­பாக சிங்­கப்­பூர் விமா­னப் போக்­கு­வ­ரத்து அதி­கா­ரி­க­ளி­டம் இருந்து தங்­க­ளுக்­குத் தக­வல் வர­வில்லை என்று மலே­சிய போலிஸ் கூறி­யது. ஆண்­டு­தோ­றும் இது­போல சரா­ச­ரி­யாக 350 ஆகாய வெளி அச்­சு­றுத்­த­லைச் சமா­ளிக்­க­வும் அது குறித்து விசா­ரிக்­க­வும் சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை போர் விமா­னங்­கள் பணி­யில் அமர்த்­தப்­ப­டு­வது வழக்­கம் என சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் பரிசோதனைச் சாதனம்

விடுமுறையிலிருந்து பள்ளிக்குத் திரும்பும் எல்லாத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் இன்று திங்கட் கிழமை முதல் கொவிட்-19 தொற்றுப் பரிசோதனைச் சாதனம் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரும் தலா மூன்று ஏஆர்டி பரிசோதனைப் பொருள்களைப் பெறுவர். பள்ளிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் நான்கு முனை அணுகுமுறையின் ஒரு பகுதியாக இவை வழங்கப்படு வதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். உடல்நலமில்லாத குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருப்பது, பள்ளிகளில் பாதுகாப்பு நிர்வாக நடை முறைகள் மற்றும் கொவிட்-19 தொற்றியோரையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோரையும் உள்ளடக்கும் பாதுகாப்பு பரிசோதனை வளையம் போன்றவை இதர அணுகுமுறைகள். இந்த வாரத்தில் எல்லா மாணவர்களும் தங்களது வீடுகளில் சுய பரிசோதனை செய்வதை அவர்களின் பெற்றோர் ஊக்குவிக்குமாறு திரு சான் கேட்டுக்கொண்டுள்ளார்.