கொள்கை ஆக்கத்தில் ஆர்வமுள்ள வீரர்

கொள்கை ஆக்கத்தில் ஆர்வமுள்ள வீரர்

2 mins read
ac344f5a-4cd6-461c-92be-264acbeaf2c7
பள்ளிப் பருவம் முதல் வரலாறு, இலக்கியம் போன்ற பாடங்களில் இருந்த ஆர்வம், உலக நடப்புகள் மீது தம்மை நாட்டம் கொள்ள வைத்தது என்று கூறிய சஞ்சீவன் செல்வம் இவையே இவரது எதிர்கால வாழ்க்கைப் பாதையைத் தீர்மானித்தன என்றார். படங்கள்: தற்காப்பு அமைச்சு -

பன்­னாட்டு உற­வு­கள், அர­சி­யல் களம், நடப்பு விவ­கா­ரங்­கள் போன்ற அம்­சங்­களில் சஞ்­சீ­வன் செல்­வத்­திற்கு அதிக ஈடு­பாடு உண்டு.

தின­மும் அதன் தொடர்­பான வி‌‌‌ஷ­யங்­க­ளைத் தெரிந்­து­கொள்ள வேண்­டும் என்ற தீரா­த தாகம், இது­தான் என் பணி இது தொடர்­பான வேலையிலேயே வேண்­டும் என்ற வேட்­கையை அவ­ரி­டம் தூண்­டி­யது.

கடந்த ஆண்டு விக்­டோ­ரியா தொடக்­கக் கல்­லூ­ரி­யில் மேல் நிலை தேர்வு எழு­திய பிறகு, எந்த உப­கா­ரச் சம்­பள விரு­துக்கு விண்­ணப்­பிக்­க­லாம் என்று யோசித்த போது, தம் விருப்­பத்­திற்கு ஏற்ப தற்­காப்பு துறை­யில் சேர்­வதே சரி என்று சஞ்­சீ­வன் முடி­வெ­டுத்­தார்.

கடந்­தாண்டு சிங்­கப்­பூர் ஆயு­தப் ­ப­டை­யின் தற்­காப்பு தகுதி உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்கு இவர் விண்­ணப்­பித்­தார். இவ்­வாண்டு அடிப்­படை ராணு­வப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது உப­கா­ரச்­ சம்­ப­ளம் கிடைத்­துள்­ளது என்ற நற்­செய்தி கிடைத்­தது.

இவ்­வாண்டு தற்­காப்பு அமைச்­சின் தற்­காப்பு தகுதி உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்ற 14 பேரில் ஒரே இந்­திய இளை­யர் சஞ்­சீ­வன் ஆவார்.

உப­கா­ரச் சம்­ப­ளத்­தின்­படி, இவர் பட்­டப்­ப­டிப்பு முடித்த பிறகு தற்­காப்பு அமைச்­சில் தற்­காப்பு நிர்­வாக அதி­கா­ரி­யாக (DXO) பணி­பு­ரி­வார்.

"உயர்­நி­லைப் பள்­ளி­யி­லி­ருந்து வர­லாறு, இலக்­கி­யம் போன்ற பாடங்­கள் சிங்­கப்­பூ­ரை­யும் உல­கத்­தை­யும் பற்றி ஆழ­மாக சிந்­திக்க உத­வின. இப்­போது என் எதிர்­கா­லப் பணி­யில் அனைத்­து­ல­கக் கண்­ணோட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரின் பங்­க­ளிப்பு என்ன என்­பதை ஆரா­யும் வாய்ப்பு கிடைக்­கும் என்று நம்­பு­கி­றேன்," என்­றார் சஞ்­சீ­வன்.

சிங்­கப்­பூர் ஆகா­யப் ­ப­டை­யில் தேசிய சேவை செய்­து­வ­ரும் இவர், 2023ஆம் ஆண்­டில் உள்­ளூ­ரிலோ வெளி­நாட்­டிலோ உள்ள ஒரு பல் கலைக்கழகத்தில் அர­சி­யல், பன்­னாட்டு உற­வு­கள் தொடர்­பி­லான பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­வார்.

பட்­டப்­ப­டிப்பு முடிந்­த­பின்­, தற்­காப்­புக் கொள்­கை­களை வகுத்­தல், தற்­காப்பு அமைச்­சின் வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை நிர்­வ­கித்­தல், மனி­த­வ­ளத்தை நிர்­வ­கித்­தல் போன்ற வெவ்­வேறு பிரி­வு­களில் இவர் அனு­ப­வம் பெற வாய்ப்பு உள்­ளது.

"கொவிட்-19 நோய், பரு­வ­நிலை மாற்­றம், இணை­யத்­தில் பாது­காப்பு சவால்­கள் போன்­றவை சிங்­கப்­பூரை மட்­டு­மல்­லாது உல­கத்­தையே பாதிக்­கின்­றன. இதுபோன்ற சவால்­ க­ளைச் சமா­ளிக்க, தற்­காப்பு அமைச்­சின் இணை­யப் பாது­காப்பு திறன்­களை மேம்­ப­டுத்­து­வது, கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்க முற்­ப­டு­வது போன்­ற­வற்­றில் ஈடு­பட்டு, எதிர்­கா­ல சிங்­கப்­பூ­ருக்­குப் பங்­க­ளிக்­கப் போவ­தில் பெரு­மி­தம் கொள்­கி­றேன்," என்­றார் 19 வயது சஞ்­சீ­வன்.

தாம் மேற்­கொள்­ள­வி­ருக்­கும் பட்­டப்­ப­டிப்பு உலக விவ­கா­ரங்­ களைப் பற்றி இன்­னும் ஆழ­மாக புரிந்­து­கொள்ள உத­வும் என்று நம்­பும் இவர், மாறி­வ­ரும் உல­கச் சூழ­லில் சிங்­கப்­பூ­ரின் பாது­காப்­பை­யும் அமை­தி­யை­யும் நிலை நாட்­டு­வ­தில் பங்­க­ளிக்க ஆவ­லு­டன் இருக்­கி­றார்.

செய்தி: ப.பால­சுப்­பி­ர­ம­ணி­யம்