கனவுகள் பலித்தன, கதவுகள் திறந்தன

2 mins read
f79ab8f6-2051-4e58-bb11-0a6d577ec223
பலமுறை முயற்சி செய்து இப்போது ராணுவ மருத்துவராகும் கனவை எட்டிப் பிடித்துள்ள குமரேஷ் நடராஜன் வெங்கடேஷ். -

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

உயர்­நி­லைப் பள்­ளி­ப் பரு­வத்­தி­லி­ருந்து ராணுவ மருத்­துவ அதி­கா­ரி­யாக சேவை­யாற்­று­வதை வெ.கும­ரே‌‌‌ஷ் நட­ரா­ஜன் கன­வா­கக் கொண்­டி­ருந்­தார்.

ஒரு­முறை, தாம் பயின்ற செயிண்ட் ஜோசப் கல்வி நிலை­யத்­தில் நடை­பெற்ற வேலைச் சந்­தை­யில் முன்­னாள் மாண­வர்­கள் தங்­க­ளது வேலை அனு­ப­வங்­களை மாண­வர்­க­ளி­டம் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

அங்கு ராணுவ மருத்­துவ அதி­காரி ஒரு­வர், அனைத்­து­லக நிவா­ர­ணப் பணி­யில் ஈடு­பட்ட அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­த­போது, இது­தான் தமக்கு ஏற்ற பாதை என்று 16வது வய­தில் முடி­வெ­டுத்­தார் கும­ரே‌ஷ்.

மேல்­நிலை தேர்­வுக்­குப் பிறகு சிங்­கப்­பூர் தேசிய பல் கலைக்­க­ழக மருத்­துவ துறை­யில் பயில விண்­ணப்­பித்­தார் ஆனால் கும­ரே­‌‌‌‌ஷுக்கு அங்கு இடம் கிடைக்­க­வில்லை.

இத­னால் தாம் அடைய விரும்­பிய பிர­சித்­தி­பெற்ற சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை மருத்­துவ உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெறும் வாய்ப்­பும் மங்­கி­யது.

இருப்­பி­னும் கும­ரே‌ஷ் மனம் தள­ர­வில்லை.

கடந்த 2015ஆம் ஆண்­டில் தேசிய சேவையைத் தொடங்­கிய இவர், பயிற்சி அதி­காரி பள்­ளிக்கு (OCS) முன்­னேறி, '1 கார்ட்ஸ்' ராணு­வப் படைப் பிரி­வின் ­த­லை­வ­ராக சேவை­யாற்­றி­னார்.

சேவை காலத்­திற்­குப் பிறகு ஓராண்­டாக செயிண்ட் ஜோசப் கல்வி நிலை­யத்­தில் தற்­கா­லிக ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்த

கும­ரேஷ், 2018ஆம் ஆண்­டில் டப்­லின் நக­ரில் உள்ள டிரி­னிட்டி கல்­லூ­ரி­யில் மருத்­து­வத் துறை பட்­டப்­ப­டிப்­பில் சேர்ந்­தார்.

அங்கு படித்­த­போ­தும், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மருத்­து­வத் துறை படிப்­பும் ஆயு­தப் படை உப­கா­ரச் சம்­ப­ள­மும் வேண்­டும் என்ற எண்­ணத்தை அவர் கைவிட வில்லை.

"வெளி­நாட்­டுப் படிப்­பின் முத­லாம் ஆண்­டில் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயில விண்­ணப்­பித்­தேன், இடம் கிடைக்­க­வில்லை. மறு­ஆண்­டான 2020ஆம் ஆண்­டில் மீண்­டும் முயன்­ற­போ­து­தான் இடம் கிடைத்­தது," என்று அந்த மகிழ்ச்­சி­யான தரு­ணத்தை நினை­வு­கூர்ந்­தார் 25 வயது கும­ரே‌ஷ்.

அதற்கு மறு­நாளே சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை மருத்­துவ உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்கு விண்­ணப்­பித்த அவ­ருக்கு அதி­லும் வெற்றி!

இவ்­வாண்டு 8 பேருக்கு கிடைத்த சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை மருத்­துவ உப­கா­ரச் சம்­ப­ளம் விருது பெற்­ற­வர்­களில் இவ­ரும் ஒரு­வர்.

வரும் 2024ஆம் ஆண்­டில் பட்­டப்­ப­டிப்பை முடித்து சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை மருத்­து­வப்­படை பிரி­வில் சேவை­யாற்ற கும­ரே‌ஷ் காத்­தி­ருக்­கி­றார்.

ஆப்­கா­னிய அக­தி­க­ளைப் பாது­காப்­பான நாடு­க­ளுக்கு கொண்­டு செல்­வ­தில் சிங்­கப்­பூர் ஆயு­தப் ­படை பங்­க­ளித்­ததை இந்த இளை­யர் அறி­வார். இது­போன்ற அனு­ப­வங்­கள் கிடைத்­தால் தமது வாழ்க்கை மேலும் செழு­மை­யா­கும் என்று கும­ரே‌ஷ் நம்­பு­கி­றார்.