பாரதியைக் கொண்டாட இணையும் இசைக் கலைஞர்கள்

பாரதியைக் கொண்டாட இணையும் இசைக் கலைஞர்கள்

2 mins read
9799ec94-44a2-45f9-8be5-a6610e3281c7
தாங்கள் புதிதாகத் தொடங்கிய 'பாரதி ப்ரதர்ஸ்' இசைக்குழுவின் மூலம் பாரதியாரின் இன்னும் பல கவிதைகளை 'மெட்டல்' இசை பாணியில் மாற்றவேண்டும் என்று (இடமிருந்து வலம்) மோஷிகன் முனியாண்டி, தரணி முனியாண்டி, வேணுகோபால் மூவரும் திட்டமிட்டுள்ளனர். படம்: த. கவி -

இந்து இளங்­கோ­வன்

பார­தி­யா­ரின் பாடல்­கள் பெரும்­பா­லும் கர்­னா­டக இசை­யி­லும் திரைப்­ப­டப் பாடல் வடி­வி­லும் கிடைக்­கப் பெறு­கின்­றன. கடந்த 2017ஆம் ஆண்டு சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா­வின்­போது தமிழ் முர­சின் ஏற்­பாட்­டில் நடந்த இசை­நி­கழ்ச்­சி­யில் பாக்ஸ்­சைல்ட், ராகா­ஸாஸ் இசைக்­கு­ழுக்­கள் ராக், ஜாஸ் பாணி­களில் பார­தி­யின் பாடல்­க­ளைப் பாடி­யி­ருந்­த­னர்.

இவ்­வாறு, காலத்­துக்கு ஏற்ப பார­தி­யின் பாடல்­க­ளுக்கு புதிய இசை வடி­வம் கொடுத்­துள்ள நீண்ட வரி­சை­யில் இசைக்

­க­லை­ஞர் வேணு­கோ­பா­லும் இணைந்­துள்­ளார்.

தாம் கேட்டு, படித்து, ரசித்த கவி­தை­ க­ளின் சுவை­யை­யும் ஆழ்ந்த பொரு­ளை­யும் இன்­றைய இளை­யர்­ளும் உண­ர­ வேண்­டும் என்ற நோக்­கத்­தோடு, அவர்­க­ளைக் கவ­ரும் வகை­யில் 'மெட்­டல்' இசை பாணி­யில் இப்­பா­டல்­க­ளுக்கு இசை அமைத்­துள்­ளார் வேணு­கோ­பால், 41.

இப்­பா­டல்­களை இம்­மா­தம் 18ஆம் தேதி நடை­பெ­றும் 'என் நினை­வில் பாரதி' என்­னும் இணை­ய நிகழ்ச்­சி­யில் கேட்டு மகி­ழ­லாம்.

இந்த நிகழ்ச்­சிக்­கா­கவே சகோ­த­ரர்களான தமது நண்­பர்­கள் மோஷி­கன் முனி­யாண்டி, தரணி முனி­யாண்­டி­யு­டன் சேர்ந்து புதி­தாக 'பாரதி ப்ர­தர்ஸ்' என்ற இசைக் குழுவை அவர் அமைத்­துள்­ளார்.

இந்­நி­கழ்ச்­சி­யில் பிர­பல உள்­ளூர் புல்­லாங்­கு­ழல் கலை­ஞர் நிரஞ்­ச­னின் 'பிரம்­மாஸ்­திரா' இசைக்­கு­ழு­வி­னர், தேசிய கலை­கள் மன்­றத்­தின் இளம் கலை­ஞர் விருதை வென்ற சுஷ்மா சோமா, லலித் குமார் ஆகி­யோ­ரும் 'பாரதி ப்ர­தர்ஸ்', இசைக்­கு­ழு­வு­டன் பங்­கேற்­க­வுள்­ள­னர்.

'பாயும் ஒளி நீ எனக்கு', 'குயில் பாட்டு', 'நல்­ல­தோர் வீணை' போன்ற புகழ்­பெற்ற பார­தி­யார் கவி­தை­களை மாறு­பட்ட பாணி­யில் படைக்­க­வுள்­ள­னர் இவர்­கள்.

"இன்று நாம் சிங்­கப்­பூ­ரில் பர­வ­லாக பேசக்­கூ­டிய இன, சமய நல்­லி­ணக்­கம், பெண் முன்­னேற்­றம் போன்ற அம்­சங்­களை நூறு ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே தமது கவி­தை­களில் பாரதி கூறி­விட்­டார்.

"இன்­ற­ள­வும் பார­தி­யின் கவி­தை­கள் இளை­யர்­க­ளுக்கு நெருக்­க­மாக இருப்பவை. இருப்­பி­னும், அவை நமது இளை­யர்­களை முழு­மை­யாக அடை­ய­வேண்­டும் என்­றால் பள்­ளி­யில் பாட­மா­கக் கற்­றுக் கொடுத்­தால் மட்­டும் போதாது.

"அவற்றை புதிய வடி­வங்­களில் அளித்­துக் கொண்டே இருக்­க­வேண்­டும்." என்­றார் வேணு­கோ­பால்.

சுப்­பி­ர­ம­ணிய பார­தி­யார் மறைந்து செப்­டம்­பர் 11ஆம் தேதி­யு­டன் 100 ஆண்­டு­கள் நிறை­வ­டை­கிறது.

இதனை முன்­னிட்டு தேசிய நூலக வாரி­யம் 'பாரதி நூற்­றாண்டு' எனும் விழாவை நடத்­த­வி­ருக்­கிறது. நூலக வாரி­யம் ஏற்­பாடு செய்­துள்ள 12 நிகழ்ச்­சி­களில் இளை­யர்­கள் படைக்­கும் இந்த இசை நிகழ்ச்­சி­யும் ஒன்று.

'பாரதி நூற்­றாண்டு' விழாவை ஒட்டி நிக­ழும் நிகழ்ச்­சி­க­ளைப் பற்றி மேலும் தெரிந்­து­கொள்ள இந்த இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்: www.facebook.com/groups/TamilLibraryServices.SG/