சட்டத் திருத்தம் தாக்கல்; சிறிய, நடுத்தர நிறுவனம், லாபநோக்கமற்ற அமைப்புகளுக்கு உதவி இரு வார வாடகைக் கழிவை உரிமையாளர் தரவேண்டும்

2 mins read
3d8646ae-41b8-4a10-aaa6-b98b10038649
-

வர்த்­தக கட்­ட­டங்­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் தங்­கள் கட்­ட­டங்­களில் வாட­கைக்கு இடத்தை எடுத்து தொழில் நடத்­தும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கும் லாப­நோக்­கற்ற அமைப்­பு­க­ளுக்­கும் இரண்டு வார வாட­கைக் கழிவைத் தர வேண்­டும்.

கொவிட்-19 தொற்­றுக்கு எதி ரான இரண்­டாம் கட்டப் பொரு­ளி­யல் கட்டுப்பாடுகளால் அந்த நிறு­வனங்­கள் பாதிக்­கப்­பட்டு இருப்­பதே இதற்­கான கார­ணம். அர­சாங்­கம் இந்த ஆண்டு தொடக்­கத்­தில் ஒரு மாத கால வாட­கையை ரொக்­க­மாக வழங்­கப்­போ­வ­தாக அறி­வித்­தது. இதை­யும் சேர்த்து தனி­யார் கட்­ட­டங்­களில் வாட­கைக்குத் தொழில் நடத்­து­வோ­ருக்கு மொத்­தம் ஒன்­றரை மாத வாட­கைக் கழிவு கிடைக்­கும்.

'வாட­கைக் கழிவு ஏற்­பாடு' என்ற ஒரு மசோதா நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டத்­திற்­கான உத்­தேச திருத்­த­மாக தாக்­கல் செய்­யப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்டு மே 16ஆம் தேதிக்­கும் ஜூன் 13ஆம் தேதிக்­கும் இடை­யிலும் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை­யிலும் நடப்­புக்கு வந்த கடுமை­யான கட்டுப்பாட்டு நட­வ­டிக்­கை­களால் பாதிக்­கப்­பட்டு இருக்­கும் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கும் குறிப்­பிட்ட லாப­நோக்­கற்ற அமைப்பு­க­ளுக்­கும் உத­வு­வது அந்­தத் திருத்­தத்­தின் நோக்­கம்.

கட்­டட உரி­மை­யா­ளர்­க­ளி­டம் இருந்து வாட­கைக் கழி­வைப் பெற வேண்­டு­மா­னால் வாட­கை­தா­ரர்­கள் பல நிபந்­த­னை­களை நிறை­வேற்ற வேண்டி இருக்­கும்.

இத­னி­டையே, நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­க­லான வாட­கைக் கழிவு ஏற்­பாடு இதர ஆத­ரவுத் திட்­டங்­களுக்கு உறு­து­ணை­யாக இருக்­கும் என்று சட்ட அமைச்சு அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக ஊழி­யர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஏற்­பட்ட பொரு­ளி­யல் பாதிப்பை ஈடு­செய்­யும் வகை­யில் 'வாடகை ஆத­ரவு திட்­டம்' என்ற ஒரு திட்­டம் நடப்­புக்கு வந்­தது. இந்­தத் திட்­டத்­தின்­கீழ் முதல் தவ­ணை­யாக ஆகஸ்ட் 6ஆம் தேதி பணம் கொடுக்­கப்­பட்­டது. அடுத்த மாதம் இரண்­டா­வது தவ­ணை­யாக பணம் கொடுக்­கப்­படும்.

அர­சாங்­கம், கட்­டட உரி­மை­யா­ளர்­கள், வாட­கைக்குத் தொழில் நடத்­து­வோர் ஆகிய மூன்று தரப்பு­களுக்கும் இடை­யில் வாடகை கடப்­பா­டு­கள் நியா­ய­மான முறை­யில் பகிர்ந்­து­கொள்­ளப்படு­வதை இந்­தப் புதிய ஏற்­பாடு உறு­திப்­ப­டுத்­தும் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

வாடகை ஆத­ரவு திட்­டத்­தின்­கீழ் இரண்­டா­வது தவணைப் பணத்தைப் பெற்­றி­ருக்­கும் வாடகை­தா­ரர்­க­ளுக்கு அடுத்த மாதம் சட்ட அமைச்சு வாட­கைக் கழி­வு­கள் பற்றிய கடி­தம் ஒன்றை அனுப்­பும்.

அதையும் தேவை­யான பத்­திரங்­க­ளையும் சேர்த்து 28 நாட் களுக்குள் கட்­டட உரி­மை­யா­ளர்­களி­டம் வாட­கை­தார்­கள் அனுப்ப வேண்­டும். இதை அனுப்­பி­னால்­தான் வாட­கைக் கழி­வு­ கிடைக்­கும்.

கட்­டட உரி­மை­யா­ளர்­கள் எல்­லா­ருமே வாட­கைக் கழிவை கொடுக்­கும் நிலை­யில் இருக்­க­மாட்­டார்­கள் என்­பது தனக்குத் தெரியும் என்று கூறிய அமைச்சு, வாட­கைக் கழிவை கொடுக்க இய­லா­த­வர்­கள், தங்­க­ளுக்கு விதி­வி­லக்கு அளிக்­கும்­படி கேட்டு விண்­ணப்­பிக்­க­லாம் என்­றும் தெரி­வித்­தது.

இதற்கு தகுதி­பெற அவர்­கள் குறிப்­பிட்ட நிபந்­த­னை­களை நிறை­வேற்ற வேண்­டும். கட்­டட உரி­மை­யா­ளர்­களும் வாட­கை­தா­ரர்­களும் பரஸ்­பர ஏற்­பு­டைய உடன்­பா­டு­களைச் செய்­து­கொள்­ளும்­படி ஊக்­க­மூட்­டப்­ப­டு­வ­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.