பல்வேறு பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரிக்கும் புதிய சட்டங்களை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.
அதேவேளையில், தவறாக அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இலக்காவோருக்கு மேலும் பாதுகாப்புத் தேவை என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாடாளுமன்றம் நேற்று குற்றவியல் சட்டத்தை (வெவ்வேறான திருத்தங்கள்) நிறைவேற்றியது.
அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பல மாற்றங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் அக்கறை தெரிவித்தனர்.
பாலியல் தொடர்பான குற்றம் சுமத்தப்படும் ஒருவரின் அடையாளத்தை, அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மேல்முறையீட்டு வாய்ப்பு இல்லை எனும் நிலை ஏற்படுவதற்கு முன்பாக, வெளியிட வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி ஆய்வு நடத்த வேண்டும் என்று நியமன உறுப்பினர் ராஜ் ஜோஷ்வா தாமஸ் கோரிக்கை விடுத்தார்.
புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை மருத்துவ ரீதியில் பொருத்தமாக இருந்தால் 50க்கும் மேற்பட்ட வயதுள்ள ஆண் குற்றவாளிகளுக்குப் பிரம்படி கொடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்மும், அதற்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்தார்.

