பருவநிலை மாற்றம், இரைச்சல் பிரச்சினையை சமாளிக்க ஊக்கம்

பருவநிலை மாற்றம், இரைச்சல் பிரச்சினையை சமாளிக்க ஊக்கம்

2 mins read
71115a49-5efc-427a-9266-ddd0e211081e
சட்டத் திருத்தத்தின்படி, 2022 அக்டோபர் 1 முதல் வெப்பநிலையை மிகவும் உயர்த்தும் கரிம வாயுக்களைக் குளிர்சாதனங்களில் பயன்படுத்த இயலாது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

பரு­வ­நிலை மாற்­றம், இரைச்­சல் பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளிக்க சிங்கப்­பூர் எடுக்­கும் முயற்­சி­களுக்கு மேலும் ஊக்­கம் கிடைக்­க­இருக்­கிறது.

சுற்­றுச்­சூ­ழல் தூய்­மை­க்கேடு பிரச்சி­னை­க­ளைக் கையா­ளும் ஒரு மசோ­தா­விற்­கான உத்­தேச மாற்றங்­கள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­க­லா­யின.

காற்­றில் கரி­மப்புகை கலப்­பதைக் கட்­டுப்­ப­டுத்­தும் இப்­போதைய முயற்சி­க­ளுக்கு 'சுற்­றுப்­புறப் பாது­காப்பு மற்­றும் மேலாண்மை (திருத்­தம்) மசோதா' என்ற அந்­தச் சட்­டத் திருத்­தத்­தின்­படி மேலும் பலம் கிடைக்­கும்.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யம், குறிப்­பிட்ட வேலை­யி­டங்­களை அடுத்த ஆண்டு அக்­டோ­பர் 1 முதல் காணொளி மூலம் கண்­கா­ணிக்க ஏது­வாக, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளிலும் பொது விடு­முறை நாட்­க­ளி­லும் வேலை­களை நிறுத்த வேண்­டும் என்ற விதி­மு­றையை ஒப்­பந்­தக்­காரர்­கள் கடைப்­பி­டிக்­கி­றார்­கள் என்­பதை உறு­திப்­ப­டுத்­த­வும் அந்­தத் திருத்­தங்­கள் உத­வும்.

நீடித்த, நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான், நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இந்த மசோதா பற்றி பேசி­னார்.

பரு­வ­நிலை மாற்­றத்­தைச் சமா­ளிக்­க­வும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் உயர்­தர வாழ்க்­கைச் சூழலை நிலை­நாட்டி வர­வும் அர­சாங்­கம் எடுக்­கும் முயற்­சி­களில் இந்­தச் சட்­டத்­தி­ருத்­தம் மேலும் ஒரு மைல்­கல் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த குளிர்­சா­த­னங்­க­ளைப் பயன்­ப­டுத்தி அதன் மூலம் சிங்­கப்­பூ­ரின் குளிர்­சா­தன தேவை­களை நாம் பொறுப்­புள்ள வகை­யில் நிறை­வேற்­று­கி­றோம் என்­பதை அந்­தத் திருத்­தச் சட்­டத்­தின் ஒரு பகுதி உறு­தி­செய்­யும்.

வேலை நிறுத்த விதியை மீறு­வோ­ருக்கு எதி­ரான அம­லாக்க நட­வ­டிக்­கை­க­ளைப் பலப்­ப­டுத்தி அதன் மூலம் உகந்த வாழ்க்­கைச் சூழலை நிலை­நாட்டி வர மசோ­தா­வின் இரண்­டா­வது பகுதி வகை­செய்­யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.