'கல்விச் சுதந்திரம் பற்றி எழுந்துள்ள கவலை தேவையற்றது'

'கல்விச் சுதந்திரம் பற்றி எழுந்துள்ள கவலை தேவையற்றது'

2 mins read
701104bd-77f5-436e-9a8a-51e43384e643
-

யேல்-என்­யு­எஸ் கல்­லூ­ரி­யைப் பல்­க­லைக்­க­ழ­கக் கல்­வி­மான்­கள் திட்­டத்­து­டன் இணைக்க எடுக்­கப்­பட்­டுள்ள முடி­வால் சிங்­கப்­பூ­ரில்

கல்­வித் துறைக்கு இருக்­கும் சுதந்­தி­ரம் பாதிக்­கப்­படும் என்று எழுந்­துள்ள கவலை தேவை­யற்­றது என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரி­வித்­தார். பத்து ஆண்­டு­

க­ளுக்கு முன்பு யேல்-என்­யு­எஸ் நிறு­வப்­பட்­ட­போ­தும் இத்­த­கைய கவ­லை­கள் மேலெழுந்­ததை அவர் சுட்­டி­னார். அவை தேவை­யற்­றவை என்­பது நிரூ­ப­ண­மா­கி­விட்­ட­தாக அவர் கூறி­னார்.

யேல்-என்­யு­எஸ் நிறு­வப்­ப­டு­வ­தற்கு முன்பே சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் (என்­யு­எஸ்), மற்ற தன்­னாட்சிப் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் ஆகி­ய­வற்­றின் கலை­கள் மற்­றும் சமூக அறி­வி­யல் துறை­களில் கற்­றல், ஆய்வு ஆகி­ய­வற்­றுக்­கான நீண்ட வர­லாறு உள்­ள­தாக

அமைச்­சர் சான் குறிப்­பிட்­டார்.

சர்ச்­சைக்­கு­ரிய விவ­கா­ர­மாக மாறக்­கூ­டிய தலைப்­பு­களை ஒட்­டி­யும் சில சம­யங்­களில் கற்­றல், ஆய்வுகள் நடத்­தப்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

யேல்-என்­யு­எஸ் கல்­லூரி-பல்

­க­லைக்­க­ழக கல்­வி­மான்­கள் திட்ட இணைப்பு சிங்­கப்­பூர் தேசிய பல்­

க­லைக்­க­ழ­கத்­தின் துறை­க­ளுக்­கு­இடை­யி­லான வருங்­கா­லத் திட்­டத்­தின் ஒரு பகுதி என்­றார் அமைச்­சர் சான். கலை­கள், அறி­வி­யல் துறை­களை இணைத்து மானு­ட­வி­யல், அறி­வி­யல் கல்­லூரி

அமைக்கப்­பட்­டுள்­ளது.

வடி­வ­மைப்பு, சுற்­றுப்­பு­றப்

பள்­ளி­யை­யும் பொறி­யி­யல் துறை­யை­யும் இணைத்து வடி­வ­மைப்பு, பொறி­யி­யல் கல்­லூரி அமைக்­கப்­பட்­டுள்­ளது. மானு­ட­வி­யல், அறி­வி­யல் கல்­லூரி கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் அமைக்­கப்­பட்­டது.

யேல்-என்­யு­எஸ் இணைப்பு குறித்து கடந்த மாதம் 27ஆம் தேதி அறி­விக்­கப்­பட்ட அதே நேரத்­தில் வ­டி­வ­மைப்பு, பொறி­யி­யல் கல்­லூரி குறித்­தும் அறி­விக்­கப்­பட்­டது.

இணைப்­புக்கு யேல்-என்­யு­எஸ் கல்­லூ­ரிக்கு ஏற்­படும் அதி­கப்­ப­டி­யான செல­வு­களும் ஒரு கார­ணம் என்­றார் திரு சான்.

ஆனால் இது இணைப்­புக்­கான முக்­கிய கார­ணம் அல்ல என்­றார் அவர். இணைப்பு தொடர்­பாக

மக்­கள் செயல் கட்சி, பாட்­டா­ளிக் கட்சி ஆகி­ய­வற்­றின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கேள்வி எழுப்­பி

இ­ருந்­த­னர். அதற்­குப் பத­லி­ளிக்­கும் வகை­யில் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இத்­த­க­வல்­களை அமைச்­சர் சான் வெளி­யிட்­டார்.

யேல்-என்­யு­எஸ் கல்­லூ­ரி­யைப் பல்­க­லைக்­க­ழ­கக் கல்­வி­மான்­கள் திட்­டத்­து­டன் இணைக்க எடுக்­கப்­பட்­டுள்ள முடிவு குறித்து மாண­வர்­கள், பெற்­றோர் ஆகி­யோ­ரி­ட­

மி­ருந்து அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்­துள்­ளன. யேல்-என்­யு­எஸ் கல்­லூ­ரி­யில் கல்­வி கற்­கும் மாண­வர் செலுத்­தும் கட்­ட­ணத்­தை­விட

என்­யுஎ­ஸ்ஸில் மானு­ட­வி­யல் அல்­லது அறி­வி­யல் துறை­யில் பயி­லும் மாண­வர் செலுத்­தும் கட்­ட­ணம் இரு மடங்­குக்­கும் அதி­கம் என்­றார் திரு சான். இணைப்பு தொடர்­பான அறி­விப்­பைக் கூடிய விரை­வில் செய்­வது குறித்து சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­க­மும் யேல் பல்­க­லைக்­க­ழ­க­மும் இணைந்து முடி­வெ­டுத்­த­தாக அமைச்­சர் சான் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இரு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் மூத்த தலை­வர்­களும் இயக்­கு­நர் சபை­யி­ன­ரும் இணைந்து முடி­வெ­டுத்­ததா­க­வும் உத்­தி­முறை, நிதி தொடர்­பாக கலந்­து­ரையா­டப்­பட்­ட­தா­லும் யேல்-என்­யு­எஸ் கல்­லூ­ரி­யின் தற்­போ­தைய மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் ஆகி­யோ­ரின் கருத்­து­கள் நாடப்­ப­ட­வில்லை என்­றார் அவர்.