கோ-அஹெட்டின் 5 பேருந்துச் சேவைகள் தற்காலிக நிறுத்தம்

கோ-அஹெட்டின் 5 பேருந்துச் சேவைகள் தற்காலிக நிறுத்தம்

2 mins read
de655e59-540b-4e3f-8669-db6dc9a1ad4d
ஊழியர் பற்றாக்குறை காரணமாக கோ-அஹெட் நிறுவனத்தின் ஐந்து பேருந்துச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப் படுகின்றன.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கோ-அஹெட் நிறு­வ­னம் நாளை

­யி­லி­ருந்து அதன் ஐந்து பேருந்­துச் சேவை­க­ளைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கிறது. கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் ஊழி­யர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­படும் பேருந்­துச் சேவை­கள் விரை­வுச்­சேவை அல்­லது நேரடி நக­ரச் சேவை­யா­கும்.

இந்­தத் தக­வலை அந்­நி­று­வ­னம் தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று முன்­தி­னம் பதி­விட்­டது.

12e, 43e, 518 ஆகிய விரை­வுச்­சே­வை­களும் 661, 666 ஆகிய நகர நேர­டிச் சேவை­களும் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­ப­டு­கின்­றன.

கோ-அஹெட் நிறு­வ­னத்­தின் பேருந்து எண் 12, 43 ஆகிய பிர­தான பேருந்­துச் சேவை­கள் தொட­ரும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் சமூக அள­வி­லான கொவிட்-19 பாதிப்பு அதி­கரித்து வரு­வ­தால் அதை எதிர்­கொள்­ளும் வகை­யில் சில பேருந்­துச் சேவை­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­ப­டு­வ­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கூறி­யது.

குறைந்த அள­வி­லான பய­ணி­கள் பயன்­ப­டுத்­தும் பேருந்­துச் சேவை­க­ளைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி, அவற்­றின் ஓட்­டு­நர்­களை அதி­க பய­ணி­கள் பயன்­ப­டுத்­தும் பேருந்­துச் சேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்த ஆணை­யத்­தின் ஒப்­பு­த­லைப் பெற்­றுள்­ள­தாக கோ-அஹெட் பேருந்து நிறு­வ­னம் கூறி­யது.

வேறு பேருந்­துச் சேவை­கள் அல்­லது எம்­ஆர்டி ரயி­லைப் பயன்­

ப­டுத்தி தாங்­கள் செல்ல விரும்­பும் இடத்­துக்­குப் பய­ணம் செய்ய, தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­படும் பேருந்­துச் சேவை­களை வழ­க்­க­

மா­கப் பயன்­ப­டுத்­து­வோ­ரி­டம் அதி­கா­ரி­கள் கேட்­டுக்­கொண்­ட­னர்.

"நிலை­மை­யைத் தொடர்ந்து அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து, சூழ்­நி­லைக்கு ஏற்ப மேலும் பல மாற்­றங்­கள் கொண்­டு­வ­ரப்­படும்," என்று ஆணை­யம் தெரி­வித்தது.

ஊழியர் பற்றாக்குறையால் தனது பேருந்துச் சேவைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று மற்றொரு பேருந்துச் சேவை நிறுவனமான டவர் டிரான்சிட் தெரிவித்துள்ளது.