பொதுப் பயனீட்டுக் கழகத்துக்கு தேசிய ஆய்வு அறநிறுவனம்
$51 மில்லியன் நிதி வழங்கியுள்ளது. தண்ணீர் தொடர்பான ஆய்வை நடத்த இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
நீர் சுத்திகரிப்புக்குத் தேவையான ரசாயனங்களை உருவாக்குவது, சிங்கப்பூரில் உள்ள தண்ணீரின் தரத்தில் பருவநிலை மாற்றம் கொண்டுள்ள தாக்கம் ஆகியவற்றுக்குத் தீர்வு காண நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பான பரிந்துரைகளைக் கழகம் நாடுகிறது. பரிந்துரைகளை வரும் நவம்பர் மாதம் 26ஆம் தேதிக்குள் கழகத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

