கட்டணக் கோரிக்கைப் பதிவுகளில் மோசடி செய்ததை ஒப்புக்கொண்ட கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் இரண்டு அதிகாரிகளுக்கு அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களது செயல்பாட்டு மதிப்பீடு பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, போலி விலை மதிப்பீட்டையும் ஆவணங்களையும் தயாரித்த இரண்டு மக்கள் கழக ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர் பதிவில் குறைபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து, ஒப்பந்ததாரர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
மற்றொருவருக்கு 12 மாத நிபந்தனையுடனான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கவனக்குறைவுடன் செயல்பட்ட இரண்டு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சு விசாரணை நடத்தி வருவதாக நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கல்வி அமைச்சிலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திலும் இதுபோன்ற விசாரணை நடத்தப்படுவதாக அவர் கூறினார்.

