பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூருக்கு வருகை தந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை நேற்று இஸ்தானா மாளிகைக்கு வரவேற்றார்.
சிங்கப்பூர், சீனாவுக்கு இடையிலான நீண்டகால உறவை இரு தலைவர்களும் மறுவுறுப்படுத்திக்கொண்டனர்.அனைத்துலக, வட்டார அளவிலான விவகாரங்களைப் பற்றி ஆக்ககரமாக, ஒளிவுமறைவின்றி இருவரும் பேசிக்கொண்டதாகத் திரு லீ ஃபேஸ்புக் பதிவில் கூறினார். கொள்ளைநோய்ப் பரவலால் உலகளவில் நிலவரம் சவால்மிக்கதாக உள்ளது.
இருந்தாலும் கிருமிப் பரவலை இன்னும் நன்றாகக் கையாள வளங்களையும் திறன்களையும் பகிர்ந்துகொள்ள இருதரப்பும் இணைந்து செயல்பட்டதாக அவர் பதிவில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட திரு வாங், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்தார்.