பல சமயங்களில், வேலையிடங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாகச் சொல்லப்படும் சம்பவங்களுக்கு ஆதாரம் இருக்காது.
பெரும்பாலான வேளைகளில் சம்பந்தப்பட்டவர்கள் விவகாரத்தைக் கைவிட்டுவிடுகின்றனர் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வேலையிடப் பாரபட்சத்தைச் சமாளிக்க சமரசப் பேச்சுவார்த்தையை முதற்கட்ட நடவடிக்கையாகவும் தேவையான ஒன்றாகவும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைகள் மீதான முத்தரப்பு வழிகாட்டுதல்களின்கீழ் அமைந்துள்ள வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு வேலையிடப் பாரபட்சத்திற்கு எதிரான சட்டங்கள் வரையப்படும் எனப் பிரதமர் லீ சியன் லூங் தேசிய தினப் பேரணி உரையில் கூறியிருந்தார்.
பாலினம், வயது, இனம், மதம், உடற்குறை போன்ற அம்சங்களின் தொடர்பில் நிகழும் வேலையிடப் பாரபட்ச சம்பவங்களைக் கையாள தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்றும் தேசிய தினக் கூட்ட உரையில் அறிவிக்கப்பட்டது.

