வர்த்தக நம்பிக்கை மேம்பட்டது

வர்த்தக நம்பிக்கை மேம்பட்டது

1 mins read
488ef139-3739-4469-a2d6-33b7760a1bd5
-

சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளின் இவ்­வாண்டு நான்­காம் காலாண்­டுக்­கான வர்த்­தகம் தொடர்பான நம்­பிக்கை சற்று மேம்­பட்­டுள்­ள­தாக ஆய்வு ஒன்­றின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. உற்­பத்­தித் துறை, நிதிச் சேவை­கள் ஆகி­ய­வற்­றுக்­கான தேவை வலு­வாக இருப்­பது உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் நம்­பிக்கை மேம்­பட்­டுள்­ள­தாக ஆய்வு குறிப்­பிட்­டுள்ளது.

எனி­னும், கட்­டு­மான, போக்கு­வரத்­துத் துறை­கள் தொடர்ந்து களை­யி­ழந்து காணப்­ப­டு­கின்றன.

உற்­பத்தி, நிதிச் சேவைத் துறை­களில் நம்­பிக்கை அதி­க­ரித்­தி­ருந்­தா­லும் நிலைமை மோச­மா­கும் அபா­யம் தொடர்ந்து இருப்­ப­தாக சிங்­கப்­பூர் வர்த்­த­கக் கடன் இலா­கா­வின் தலைமை நிர்­வாகி ஓட்ரி சியா கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரி­லும் உல­க­ள­வி­லும் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லின் தொடர்­பில் இன்­னும் பல அம்­சங்­களில் தெளிவு இல்­லா­மல் இருப்­ப­தால் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் அத­னால் பாதிக்­கப்­ப­ட­லாம் என்று அவர் கூறி­னார். மேலும், சீனா­வின் புதிய கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­கள், நாடு­க­ளுக்­கிடையிலான அர­சி­யல் சூழல் தெளிவு இல்­லா­மல் இருப்­பது போன்ற கார­ணங்­களும் பொது­வாக வர்த்­தக நம்­பிக்­கை­யைப் பாதித்­தி­ருப்­ப­தாக அவர் சொன்­னார்.