சிங்கப்பூர் ஊழியர்களுக்கு மாதந்தோறும் தரவேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தை 1,400 வெள்ளிக்கு மேல் உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக இந்தத் தொகையை வழங்கவேண்டும் என்று மனிதவள அமைச்சு சென்ற மாதம் அறிவித்தது. இதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திரு ஸாக்கி பதிலளித்தார்.