விருப்புரிமை அடிப்படையிலான ஊழியர்களுக்கும் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கும் இடையே நியாயமான உறவை ஏற்படுத்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை விருப்புரிமை அடிப்படையிலான ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு வெளியிட்டது.
இக்குழு முதல்முறையாக நேற்று கூடி கலந்துரையாடியது. சட்ட திருத்தம் குறித்த கலந்துரையாடல்கள் ஆரம்பநிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
விநியோக ஓட்டுநர்கள், தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் போன்றவர்கள் விருப்புரிமை அடிப்படையிலான ஊழியர்கள் பிரிவின்கீழ் அடங்குவர். பலதரப்பினருடன் கலந்துரையாடி அவர்களது கருத்துகளைச் சேகரித்து அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதிக்குள் அனை
வரும் பலனடையும் விதமான பரிந்துரைகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆலோசனைக் குழுவின் ஆலோசகராகச் செயல்படும் சுகாதார, மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார்.
விருப்புரிமை அடிப்படையிலான ஊழியர்களின் ஓய்வுக்கால, வீடமைப்பு அம்சங்கள் போன்றவற்றை மேம்படுத்த ஆலோசனைக் குழு இலக்கு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இப்பிரிவைச் சேர்ந்த ஊழியர்
களுக்கு வேலையிடத்தில் காயம் ஏற்பட்டால் போதுமான நிதிப் பாதுகாப்பு இருப்பதை ஆலோசனைக் குழு உறுதி செய்ய விரும்புகிறது.

