சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான
அச்சுறுத்தல் தொடர்பாக குறிப்பிட்ட, நம்பகமான வேவுத் தகவல் ஏதும் இல்லை என்று உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
தென்கிழக்காசிய நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்
படக்கூடும் என்று அண்மையில் ஜப்பானிய வெளியுறவு அமைச்சு இவ்வட்டார நாடுகளில் வசிக்கும் அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
இந்த விவகாரம் குறித்து ஜப்பானிய உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டதாக உள்நாட்டுப்
பாதுகாப்புத்துறை கூறியது.
பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவது தொடர்பான நம்பகமான வேவுத் தகவல் இல்லாதபோதிலும் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்
படியும் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் அல்லது நபர்களைப் பார்த்தால் உடனடியாக 1800-2626-473 என்ற எண் மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்
பட்டுள்ளது.

