செங்காங்கில் உள்ள புளோக் 185C ரிவர்வேல் கிரசெண்ட்டில் உள்ள வீடு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு தீச்சம்பவம் ஏற்பட்டது.
தனிநபர் நடமாட்டச் சாதனத்தின் மின்கலன் மின்னூட்டப்பட்டபோது அது தீப்பிடித்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வீட்டில் வசித்த மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தீச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.