அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மன்னிப்புக் கேட்டார்

அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மன்னிப்புக் கேட்டார்

1 mins read
fbff9dd5-0e9b-47cf-9191-4333a0735dc1
அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (இடம்) திரு லியோங் மன் வாய். படங்கள்: தகவல் தொடர்பு அமைச்சு, யூடியூப் -
multi-img1 of 2

வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யைச் சேர்ந்த தொகுதி இல்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் மன் வாய் பற்றி நாடா­ளு­மன்­றத்­தில் தரக்­கு­றை­வா­கக் கூறிய வார்த்­தை­க­ளுக்கு மன்­னிப்­புக் கேட்­டுள்­ளார். அது பற்றி டாக்­டர் பால­கி­ருஷ்­ணன் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டார்.

நாடா­ளு­மன்­றத்­தில் தமது சக உறுப்­பி­ன­ரி­டம் தனிப்­பட்ட முறை­யில் கூறிய வார்த்­தை­க­ளுக்­காக திரு லியோங்­கைத் தொடர்­பு­கொண்டு மன்­னிப்­புக் கேட்­ட­தாக அமைச்­சர் கூறி­னார். விவா­தத்­தில் கருத்து வேறு­பாடு இருந்­த­போ­தும், தாம் அவ்­வாறு கூறி­யி­ருக்­கக் கூடாது என்று டாக்­டர் பால­கி­ருஷ்­ணன் குறிப்­பிட்­டார். திரு லியோங் தமது மன்­னிப்பை ஏற்­றுக்­கொண்­ட­தாக அமைச்­சர் கூறி­னார்.

நேற்று முன்­தி­னம் நடந்த நாடா­ளு­மன்ற விவா­தத்­தின்­போது திரு லியோங்­கும் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங்­கும் பல­முறை எதிர்க்­ க­ருத்­து­க­ளைப் பரி­மா­றிக் கொண்­ட­னர். அப்­போது திரு லியோங்­கின் பள்ளி பற்றி சிலர் கூறிய வார்த்­தை­கள் ஒலிப்­பெ­ருக்­கி­யில் கேட்­டது. அது சமூக ஊட­கங்­களில் பர­வி­யது.

அமைச்­சர் மன்­னிப்­புக் கேட்­டதை உறு­திப்­ப­டுத்­திய திரு லியோங், சிங்­கப்­பூ­ருக்­கா­க எல்­லா­ரும் நேரத்தை இன்­னும் பய­னுள்ள முறை­யில் செல­வி­ட­லாம் என்­றார்.