கேலிச்சித்திரங்களும் புத்தகங்களும் படிக்கப் பிடிக்கும், கற்பனைக் குதிரையில் வெகுதூரம் சென்ற சிறுமி.
பள்ளியை மிகவும் விரும்பிய சிறுமி. தமது ஐந்து வயதில் தந்தை காலமானபோது தாயின் கடும் உழைப்பை உணர்ந்து படித்த சிறுமி. தம்மால் முடியுமா என்ற சந்தேகத்தைக் கடந்து படித்து, வழக்கறிஞராகி பின்னாளில் பிரதமர் அலுவலக அமைச்சரானார்.
'இந்தச் சிறுமி நான்தான்' எனும் சமூக ஊடக இயக்கத் தின் ஒரு பகுதியாக தமது நினைவுகளை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் திருவாட்டி இந்திராணி. சிண்டாவின் இணையப்பக்கத்தில் அது நேற்று தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிடப்பட்டது.
'இன்ஸ்பயரிங் கேர்ல்ஸ் இன்டர் நேஷனல்' எனும் அமைப்பின் சிங்கப்பூர் கிளை இந்த இயக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கனவுகளை எட்டிப் பிடிக்க சிறுமிகளை ஊக்குவிக்க பெண் ஆளுமைகள் தாங்கள் சிறுமியாக இருந்த நினைவு களைப் பகிர்ந்துள்ளனர்.
"சிறுமிகளே! என்னுடைய வெற்றியின் இரகசியம் - நீங்களாக இருங்கள், உங்கள் கனவுகளை நோக்கி செல்லுங்கள், உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்," ஊக்கம் தந்தார் அமைச்சர் இந்திராணி.

