பிரித்தம்: வதந்திகள் உலவியதில் அரசாங்கத்துக்கும் பொறுப்பு உண்டு

பிரித்தம்: வதந்திகள் உலவியதில் அரசாங்கத்துக்கும் பொறுப்பு உண்டு

2 mins read
dde91194-9014-422e-990b-df83535a1c0b
-

இந்­தி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான பொரு­ளி­யல் ஒப்­பந்­தம் பற்­றிய உல­வும் வதந்தி களுக்கு அர­சாங்­கம் சற்று பொறுப்­பேற்­றுக் கொள்­ள­வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற எதிர்த்தரப்­புத் தலை­வ­ரும் பாட்­டாளிக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான திரு பிரித்­தம் சிங் கூறி­யுள்­ளார்.

வெளி­நாட்­ட­வரை வேலைக்கு எடுப்­பது, சீக்கா ஒப்­பந்­தம் போன்ற அம்­சங்­கள் பற்றி நாடா­ளு­மன்றத் த்தில் நேற்று முன்­தி­னம் நடந்த விவா­தத்­தில் பேசி­ய­போது திரு சிங் இதைத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி அந்த விவ­கா­ரத்­தைக் கையில் எடுத்துக்கொள்­வ­தற்கு முன்­னரே அது பற்றிய அதிருப்தி ­மக்­க­ளி­டம் நீரு­பூத்­த­நெ­ருப்­பாக இருந்­தது என்று அவர் கூறி­னார்.

தர­வு­களை வெளி­யி­ட­வும் தேசிய அள­வில் தெரிந்­து­கொள்ள வேண்­டிய தக­வல்­க­ளைப் பற்­றிய கேள்­வி­க­ளுக்­குப் பதில் சொல்­ல­வும் அர­சாங்­கம் மறுத்­த­தால் மக்­க­ளிடையே­ தவ­றான புரி­த­லும் பொய்­யான வதந்­தி­களும் பெரு­கி­ய­தாக திரு சிங் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் தொடர்­பு கலா­சா­ரம் மாற­வேண்­டும் என்ற அவர் அந்த விவ­கா­ரம் பற்றி பொது விவா­தத்­தைத் தெளி­வாக்கக் கூடு­தல் தக­வல்­களை வெளி­யி­டும்­படி அர­சாங்­கத்­தைக் கேட்­டுக்­கொண்­டார்.

நாடா­ளு­மன்­றத்­தில் அரை மணி நேரம் பேசிய திரு பிரித்­தம் சிங், தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­கள் பற்­றி­யும் பாட்­டாளி கட்­சிக்கு உள்ள நிலைப்­பாடு பற்றி விவ­ரித்­தார்.

தடை­யற்ற வர்த்­தக உடன்­பாடு­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் வெளி­நாட்­ட­வ­ருக்­கும் வேலைகளை­யும் வாய்ப்­பு­க­ளை­யும் உரு­வாக்­கின என்­பதை மறுக்க முடி­யாது என்று திரு சிங் கூறி­னார்.

ஆனால் உள்­நாட்­டி­லும் வெளி­நாட்­டி­லும் சில தரப்­பு­கள், சீக்கா உடன்பாட்டைச் சாக்­கா­கப் பயன்­ படுத்தி, பொரு­ளி­யல் கவ­லை­ களின் போர்­வைக்­குள் இன­ வாதத்தை மறைத்து வைத்­த­த­தாக திரு சிங் கூறி­னார். இன­வா­தம், இன­வெ­றுப்பு ஆகி­ய­வற்றை பாட்­டாளி கட்சி வெறுப்­ப­தா­க­வும் கண்­டிப்­ப­தா­க­வும் திரு சிங் கூறினார்.

விவாதத்தில் பேசிய பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரு, குடிநுழைவு, ஊழியரணி பற்றிய விவரங்களை அரசாங்கம் மேலும் வெளிப்படையாக அளிக்கவேண்டும் என்றார்.