'தி ஆன்லைன் சிட்டிசன்' தளம் முடக்கம்

'தி ஆன்லைன் சிட்டிசன்' தளம் முடக்கம்

2 mins read
67839b8c-aee4-4e72-a0f9-ac1387227801
-

'தி ஆன்­லைன் சிட்­டி­சன்' என்ற சமூக-அர­சி­யல் இணை­யத் தள­மும் அதன் பல்­வேறு சமூக ஊட­கத் தளங்­களும் முடக்­கப்­பட்­டுள்­ளன.

இவை நேற்று பிற்­ப­கல் மூன்று மணிக்கு மூடப்­பட்­டி­ருக்­க ­வேண்­டும். எனி­னும், தக­வல், தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் விதித்­துள்ள உத்­த­ர­வுக்கு இணங்­கும் வித­மாக இவை முன்­ன­தா­கவே மூடப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரிலும் வெளி­நாட்­டிலும் இருப்­ப­வர்­கள் இனி இத்­த­ளத்­தைக் காண முடி­யாது.

தி ஆன்­லைன் சிட்­டி­சன் தளத்­தின் ஃபேஸ்­புக், டுவிட்­டர் கணக்­கு­கள் செய­லி­ழக்­கப்­பட்­ட­து­டன் அதன் இன்ஸ்­ட­கி­ராம் கணக்கு தனி­யார் பார்­வைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது.

அதன் யூடி­யூப் தளத்­தல் உள்ள அனைத்து காணொ­ளி­களும் அகற்­றப்­பட்­டுள்­ளன.

செயல்­பாட்­டுக்­கான நிதி ஆதா­ரங்­களை வெளி­யிட வேண்­டும் என்ற சட்­டபூர்வக் ­க­டமை இருந்­த­போ­தி­லும், அவற்றை முழு­மை­யாக வெளி­யிட அந்­தத் தளம் பல­முறை தவ­றி­யது.

அதனை அடுத்து இந்த வாரம் திங்­கட்கிழமை, தகவல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம், அந்த இணை­யத்தளத்­தின் உரி­மத்தை ரத்து செய்­தது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்த நிபந்­த­னைக்­குக் கட்­டுப்­பட 'தி ஆன்­லைன் சிட்­டி­சன்' தவ­றி­யுள்­ள­தாக ஆணை­யம் எச்­ச­ரித்­தது.

முழு விவ­ரங்­களை வெளி­யிட தொடர்ந்து மறுத்­தால் உரி­மம் செப்­டம்­பர் 28ஆம் தேதிக்­குள் ரத்து செய்­யப்­படும் என்­றும் ஒளி­ப­ரப்­புச் சட்­டத்­தின்­படி இணை­யத்­த­ளத்­தின் அதி­கா­ரி­கள் மீது குற்­ற­வி­யல் வழக்கு­கள் தொட­ரப்­ப­ட­லாம் என்றும் ஆணையம் இணையத் தளத்தை எச்சரித்தது.

கடந்த 2006ல் தொடங்­கப்­பட்ட 'தி ஆன்­லைன் சிட்­டி­சன்', சிங்­கப்­பூ­ரில் நீண்ட காலமாக வெளி­வந்த சுயேச்­சை­ இணைய ஊட­கத் தள­மா­கும்.

குறைந்­தது 2016ஆம் ஆண்டிலிருந்து அதன் ஆசி­ரி­யர் டெரி ஸு ஒரு­வ­ர் மட்­டுமே அதனை நடத்தி வருவதாக அறி­யப்­ப­டு­கிறது.

இவ்­வாண்டு செம்­டம்­பர் 1ஆம் தேதி பிர­த­மர் லீ சியன் லூங்கை அவ­தூறு செய்த வழக்­கில் அவ­ருக்கு $210,000 இழப்­பீடு வழங்க வேண்­டும் உயர்­நீதிமன்­றம் ஸுவுக்கு உத்­த­ர­விட்­டது.

பிர­த­ம­ருக்கு வழங்க வேண்­டிய இழப்­பீட்­டுத் தொகைக்­காக திரு ஸு நிதி திரட்­டு­வ­தா­க­வும் புதன்­கி­ழமை இரவு வரை­ அவர் $195,000 திரட்டியதாகவும் அவ­ரது வழக்­க­றி­ஞர் லிம் தியென் கூறி­யுள்­ளார்.