சிங்கப்பூர் - ஆஸ்திரேலிய பிரதமர்கள் உரையாடல்

சிங்கப்பூர் - ஆஸ்திரேலிய பிரதமர்கள் உரையாடல்

1 mins read
336a2a58-2c5f-4e3e-8622-0bd9b9d86865
-

ஆஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்கா, பிரிட்­டன் ஆகி­ய நாடுகள் புதி­தா­கத் தொடங்கியுள்ள மூன்று நாட்­டுப் பங்­கா­ளித்­து­வம் பற்றி ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் பிர­த­மர் லீ சியன் லூங்கிடம் விவரம் அளித் துள்ளார். வெளி­யு­றவு அமைச்சு நேற்று இதைத் தெரி­வித்­தது. ஆக்­கஸ் என்று பெய­ரி­டப்­பட்ட அப்­பங்­கா­ளித்­து­வம் பற்றி அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன், திரு மோரி­சன் ஆகிய மூவ­ரும் நேற்று அறி­வித்­தி­ருந்­த­னர்.

ஆஸ்­தி­ரே­லியா அதன் நீர்­மூழ்­கிக் கப்­பல்­களில் அணு­வாற்­றல் பெற்­ற­தாக மாற்­ற­வும் அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து நீண்­ட­தொ­லைவு பாயக்­கூ­டிய எறி­ப­டை­களை அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து வாங்­க­வும் அந்த பங்­கா­ளித்­து­வம் வகை செய்­யும்.

ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் இது­பற்றி அழைத்து விவரித்தபோது, ஆஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்கா, பிரிட்­டன் ஆகி­ய­வற்­று­டன் சிங்­கப்­பூர் கொண்­டி­ருக்­கும் நீண்­ட­கால உறவு­ க­ளைப் பிர­த­மர் சுட்­டி­ய­தாக வெளி­யு­றவு அமைச்சு கூறி­யது.

அப்­பங்­கா­ளித்­து­வம் இந்த வட்­டா­ரத்­தின் அமை­திக்­கும் நிலைத்­தன்­மைக்­கும் ஆக்­க­க­ர­மா­கப் பங்­காற்­றும் என்­றும் வட்­டா­ரக் கட்­ட­மைப்­பு­டன் ஒத்துழைக்கும் என்று திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.